சுருதி : செவியுறுதல் = கேட்டல் செவியுறு - ச்ரு - ச்ருதி = கேள்வி. முதற்காலத்தில் எழுதப்பெறாது கேட்டேயறியப் பட்டு வந்த ஆரிய மறை. மண்டலம் : முல் - முன் - முனி = வில். முல் - முர் - முரி. முரிதல் = வளைதல். முரி - மூரி = வளைவு. முர் - முரு - முருகு = வளைந்த காதணி. முர் - முறு - முறுகு. முறுகுதல் = வளைதல்; திருகுதல். முறுகு - முறுக்கு = திருகல், திருகிய தின்பண்டம். முறுக்கு - முறுக்கம். முறு - முற்று - முற்றுகை = நகரைச் சூழ்கை. முறு - முறை - மிறை = வளைவு. முறு - முறி. முறிதல் = வளைதல், முறி - மறி. மறிதல் = வளைதல், மடங்குதல். முல் - (முள்) - முண்டு = உருட்சி, திரட்சி. முண்டு - முண்டை = உருண்டை, முட்டை. "முண்டை விளைபழம்" (பதிற். 60:6) முள் - முட்டு - முட்டை முள் - (முண்) - முணம் - முணங்கு. முணங்குதல் = உள் வளைதல். முணம் - முடம் = வளைவு. முடம் - முடங்கு. முடங்குதல் = வளைதல். முடங்கு - மடங்கு. முடங்கு - முடக்கு = மடக்கு. முடம் - (முடல்) - முடலை = குறடு, உருண்டை. முண்டு - மண்டு. மண்டுதல் = வளைதல். மண்டு - மண்டி, மண்டியிடல் = முழங்காலை மடக்குதல். மண்டு - மண்டலம், வட்டம். நாட்டுப்பகுதி, காலப்பகுதி, நூற்பகுதி. கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் வழக்குகளை நோக்குக. மண்டலம் - மண்டலி, மண்டலித்தல் = செய்யுளின் எல்லா அடிகளும் அளவொத்து வருதல். ஈறு தொடங்கியில் (அந்தாதியில்) முதலும் ஈறும் ஒன்றித்து வருதல். |