பக்கம் எண் :

எழுத்தியல்25

4. வினைத்தொகையில்

உ-ம்: சுடுசாதம், விடிகாலை

5. உகர ஈற்றுத் தந்த, தாந்த, தனந்த என்னும் வாய்பாட்டு இறந்தால வினையெச்சங்கட்குப் பின்

உ-ம். என்று சொன்னான் - தந்தவாய்பாடு
நீண்டு சென்றது. -தாந்த வாய்பாடு
ஒளிந்துகொண்டான்

விரைந்து பேசினன் தனந்த வாய்பாடு

6. தனிக்குறிலை யடுத்த யகரமெய்யா யிருக்கும் வினைப் பகுதிகளின் இறந்தகால வினையெச்சத்திற்குப் பின்

உ-ம்: செய்துகொள், கொய்து தின்

7. துவ்வீற்றுக் குறிப்பு வினையெச்சத்திற்கும் எதிர்மறை வினையெச்சத்திற்கும் பின்

உ-ம்: நெடிது பேசினான்.
செய்யாது போனான், இல்லாது போயிற்று

8. துவ்வீற்றுச் சுட்டு வினாப் பெயர்கள் பெயரெச்சமாய் நிற்கும்போது.

உ-ம்: அது போழ்து, எது போழ்து

9. பலவின்பால் வினைமுற்றுக்குப் பின்

உ-ம்: வந்தன குதிரை, பறந்தன பறவைகள்

10. ஆ, ஏ, ஓ என்னும் இடைச்சொற்கட்குப்பின்

உ-ம்: இராமனா பெரியன், செய்யவே செய்வான், எவனோ கொண்டான்.

11. மு, எட்டு, பத்து, கோடி என்பவை யல்லாத பிற எண்ணுப் பெயர்கட்குப் பின்.

உ-ம்: ஒரு பையன், அறுபது, நூறு பேர்
எழுவாய்த் தொடரிலும் விளித்தொடரிலும் பெரும்பாலும் வலிமிகா.

உ-ம்: கோழி கூவிற்று, இராமா! செல்.