4. வினைத்தொகையில் உ-ம்: சுடுசாதம், விடிகாலை 5. உகர ஈற்றுத் தந்த, தாந்த, தனந்த என்னும் வாய்பாட்டு இறந்தால வினையெச்சங்கட்குப் பின் உ-ம். என்று சொன்னான் - தந்தவாய்பாடு நீண்டு சென்றது. -தாந்த வாய்பாடு ஒளிந்துகொண்டான் விரைந்து பேசினன் தனந்த வாய்பாடு 6. தனிக்குறிலை யடுத்த யகரமெய்யா யிருக்கும் வினைப் பகுதிகளின் இறந்தகால வினையெச்சத்திற்குப் பின் உ-ம்: செய்துகொள், கொய்து தின் 7. துவ்வீற்றுக் குறிப்பு வினையெச்சத்திற்கும் எதிர்மறை வினையெச்சத்திற்கும் பின் உ-ம்: நெடிது பேசினான். செய்யாது போனான், இல்லாது போயிற்று 8. துவ்வீற்றுச் சுட்டு வினாப் பெயர்கள் பெயரெச்சமாய் நிற்கும்போது. உ-ம்: அது போழ்து, எது போழ்து 9. பலவின்பால் வினைமுற்றுக்குப் பின் உ-ம்: வந்தன குதிரை, பறந்தன பறவைகள் 10. ஆ, ஏ, ஓ என்னும் இடைச்சொற்கட்குப்பின் உ-ம்: இராமனா பெரியன், செய்யவே செய்வான், எவனோ கொண்டான். 11. மு, எட்டு, பத்து, கோடி என்பவை யல்லாத பிற எண்ணுப் பெயர்கட்குப் பின். உ-ம்: ஒரு பையன், அறுபது, நூறு பேர் எழுவாய்த் தொடரிலும் விளித்தொடரிலும் பெரும்பாலும் வலிமிகா. உ-ம்: கோழி கூவிற்று, இராமா! செல். |
|
|