பக்கம் எண் :

24கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

9.    ட,ற இரட்டித்த நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கட்குப்பின்.
     
      உ-ம்: ஆட்டுக்கால், கிணற்றுத்தவளை.
      கேடுகாலம், பேறுகாலம், வீடுபேறு, நாடுகிழவோன் முதலிய தொடர்களில் ட,ற இரட்டியாமையின் வலி மிகவில்லை.

      ஆறு என்னும் பெயர் எண்ணைக் குறிப்பின், வேற்றுமையினும் இரட்டியாது
      (ஆகவே இயல்பாய்ப் புணரும்); பிறவற்றைக் குறிப்பின் இரட்டிக்கும்.

      உ-ம்: ஆறில் ஐந்தைக் கழி, ஆற்றில் இறங்கு, அவ்வாற்றால்

10.   புணர்ச்சியில் வன்றொடரான மென்றொடர்க் குற்றிய லுகரங்கட்குப் பின்
      உ-ம்: இருப்புப்பாதை

11.    ஐகாரச்சாரியை பெற்ற குற்றியலுகரச் சொற்கட்குப் பின்.
      
      உ-ம்: பண்டைக்காலம், அற்றைக்கூலி,
      ஒற்றைப்பனை, இரட்டைப்பிள்ளை

12.   அத்து இற்றுச் சாரியைப் பெயர்கட்குப்பின். 

      உ-ம்: பட்டினத்துப்பையன், பதிற்றுப்பத்து

13.   மு, எட்டு, பத்து, கோடி என்னும் எண்ணுப்பெயர்கட்குப் பின்.

      உ-ம்: முக்கால், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கோடிக்கணக்கு.

14.   உயிரையும் ய ர ழ மெய்களையும் இறுதியாகவுடைய நிலைமொழிகளுள்ள
      தொகைமொழி (
Compound word )களில்.

      உ-ம்: கிளிக்கூண்டு,இடைச்சேரி, ஏப்புழை
      வாய்க்கால், ஊர்க்குருவி, தமிழ்ச்சங்கம்


வலிமிகா இடங்கள் -
Combination in which the Hard consonants are not doubled

1.    3ஆம் வேற்றுமை ஒடு, ஓடு என்னும் உருபுகட்குப்பின்

      உ-ம்: இராமனோடு பேசினான்.

2.    6ஆம் வேற்றுமைக்குப்பின்
      சீதை கற்பு
      எனது புத்தகம், என்னுடைய கை, என கால்கள்

3.    அகரவீற்றுப் பல்வகைப் பெயரெச்சங்கட்குப் பின்
      உ-ம்: வந்த பையன், வருகிற திங்கள், பெரிய பட்டினம், செய்யாத பையன்,
      அல்லாத  காலம்.