5. இகர ஈற்றுத் தந்த, தாந்த, தனந்த என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப் பின் (இம் மூன்று வாய்பாடுகளிலும் இறுதியில் வருவது வல்லின உயிர் மெய்க் குறிலே.) இரு குறிற்கிடையில் மெல்லின மெய்வரின் தந் த வாய்பாடாம். உ-ம்: மங்கிப்போனது. ஒரு தனி நெடிற்குங் குறிலுக்கு மிடையில் மெல்லின மெய்வரின் தாந்தவாய்பாடாம். உ-ம்: வாங்கிக்கொண்டான். ஒரு குறிலிணைக்கும் குறிலுக்கு மிடையில் மெல்லின மெய்வரின் தனந்த வாய்பாடாம். உ-ம்: விரும்பிப் படித்தான். இங்குக் கூறப்பட்டுள்ள சந்த வாய்பாடுகளைத் திருப்புகழ் வாயிலாய் ஆசிரியர் மாணவர்க்குத் தெளிவாக்குக. 6. அ, இ, உ, எ; அந்த, இந்த, உந்த, எந்த; அப்படி, இப்படி, உப்படி, எப்படி; அங்கு, இங் கு, உங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, ஊங , யாங்கு; ஆண்டு, ஈண்டு, ஊண்டு, யாண்டு என் னும் சுட்டுவினாவெழுத்துகட்கும் சொற்கட்கும் பின். உ-ம்: அப்பையன், அந்தப் பையன், அப்படிச் சொன்னான். அங்குச்சென்றான், ஆங்குச்சொன்னான், ஆண்டுப்பெற்றான், இங்ஙனமே பிறவும். அப்படி, அங்கு, ஆங்கு, ஆண்டு முதலியவை இறுதியில் ஏகாரம் பெறின் இயல்பாம். உ-ம். அப்படியே, அங்கே, ஆங்கே, ஆண்டே - போனான். படி என்னுஞ்சொல் சுட்டுவினாவெழுத்துகளை யடுத்து வராது பெயரெச்சங்களை யடுத்து வரின் இயல்பாம். உ-ம்: சொன்னபடி செய், சொல்லுகிறபடி செய். சொல்லும்படி செய். 7. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச வினையெச்சங்கட்கும், செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சத்திற்கும் பின். உ-ம்: உண்ணாக்குதிரை - ஈ. எ. பெ. எ. படியாச் சென்றான் - ஈ. எ. வி. எ. பெய்யாக் கொடுக்கும் - செ. வி. எ. 8. மகரஈறு கெட்டுக் குறிப்புப் பெயரெச்சமாய் நிற்கும் பெயர்கட்குப்பின். உ-ம்: மரப்பலகை, வட்டக்கல். |