பக்கம் எண் :

4கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

பிழை

திருத்தம்

ஊரு, குளிரு  

ஊர்,குளிர்

4. குற்றியலுகரம்

     குற்றியலுகரம் ஏறிவரக்கூடிய மெய் வல்லின றகரமே.

     ஒரு சொல்லின்  கடைசியில்  வல்லின  மெய்யின்மே  லேறிவரும் உகரம் குற்றியலுகரம் என்னும் பொது விதியை நினைக்க.

   உ-ம்: ஆறு, கிணறு, மற்று, கன்று.

5. புணர்ச்சித் திரிபு

     ல், ன் என்ற மெய்களின் புணர்ச்சித் திரிபெல்லாம் வல்லின றகரமே.

     உ-ம்:

ல் - கல் + பலகை

கற்பலகை.

கல் + தாழை

கற்றாழை

வருதல் + கு

வருதற்கு.

ன் - தன் + பெருமை

தற்பெருமை.

பொன் + தோடு

பொற்றோடு.

அதன் + கு

அதற்கு.

வந்ததன் + கு

வந்ததற்கு.

5. தற்பவத்திரிபு

        வடசொற்களிலுள்ள த், ஸ், ல்  என்னும்  எழுத்துகள்  தமிழில்  திரியக் கூடியது வல்லின றகரமாயே.

உ-ம்:  

உத்சவம்

உற்சவம்

பஸ்மம்

பற்பம்

அல்பம் 

அற்பம் 

ரகர றகரச் சொற்கள்

அரம்=   ஓர் ஆயுதம்

அறம் = தருமம்

அரவு = பாம்பு, ஒர் தொழிற்பெயர் விகுதி

அறவு = நீக்கம், முடிவு

அரன் = சிவன்

அறன் = தருமம் (போலி)

அரா = பாம்பு, சிவனே!

அறா = நீங்கா,நீங்காத(அம்பறாத்தூணி)

அரா =ஏ. காய்களைச் சிறிதாயறு பொருள்களைச் சிறிது சிறிதாய்ச் சேர், பயிர்களைஅறு,எறும்புபோல்பொருள்களைத்தின பெ. அரிக்கட்டு, திருமால்

அறி = தெரிந்துகொள்.

அரு = பெ. வடிவில்லாதது       பெ. எ. அரியஅருமையான

அறு = ஏ. நீங்கு பெ. எ. ஆறு (six)