பக்கம் எண் :

எழுத்தியல்53

  ix. திருமுக விளி
        உ-ம்: ஐயா,

  x. இணைமொழிகள்
       உ-ம்: நல்லவன் கெட்டவன், செல்வன் ஏழை, இளைஞன்
             முதியன் என்று பாராதவன்.

  xi. நெடுந்தொடரெழுவாய்.
       உ-ம்: செந்தமிழாக்கங் கண்ணுங் கருத்துமாய்ப் பேணும் ஒரு
              புலவர், வடசொல் வழங்குவதற்கோர் காரணம் வேண்டும்.

  xii. இடைப்பிறவரல் (இங்கு முன்னும் பின்னும் குறிவரும்)
      உ-ம்: அரசன், எப்படியிருந்தபோதிலும், மனிதன்தானே.

  xiii. மறுத்துக்கூறும் வாக்கியப்பகுதி.
      உ-ம்: அது அறியாமையன்று, கவலையீனமே.

  xiv. வாக்கிய வுறுப்பாய் வரும் மேற்கோள்.
      உ-ம்: "அன்பே சிவம்" என்றார் திருமூலர்.
      குறிப்பு: காற்புள்ளி இருக்குமிடத்துப் புணர்ச்சியிராது; புணர்ச்சி
              யிருப்பின் காற்புள்ளி யிராது.

2. அரைப்புள்ளி (
Semi colon ) வருமிடங்களாவன:-

  i. ஒரே யெழுவாயின் பல வினைக்குறை வாக்கியங்கள்.
      உ-ம்: இயந்திரம் உழவுத்தொழில் செய்கிறது; மாவரைக்கிறது; 
            இடம் பெயர்விக்கிறது; போர் செய்கிறது; இன்னும்
            எத்துணையோ வினைகளைச் செய்கிறது.

  ii. ஒப்புநோக்காய் வரும் புணர்வாக்கியம்.
      உ-ம்: அறிவுடையோர் அமைந்திருப்பர்; அறிவிலிகள் ஆரவாரிப்பர்.

3. முக்காற்புள்ளி (
Colon ) வருமிடங்களாவன:

  i.  தலைப்பு
     உ-ம்: சார்பெழுத்து:

  ii. அதிகார எண்
     உ-ம்: மத்தேயு 8:6

  iii. தன் விலாசத்தில் நகர்ப்பெயர்.
     உ-ம்: எடின்பரோ: 339, ஹைரோடு.

  iv. ஒப்புநோக்காய் வரும் பெரும்புணர் வாக்கியம்
     உ-ம்: கல்வி வெள்ளத்தாலழியாது; நெருப்பால் வேகாது; திருடரால்
     திருடப்படாது; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்க நிறையும்; செல்வமோ