பக்கம் எண் :

மொழியதிகாரம்137

     சண்டி = கொடியவள், காளி, இடக்குப்பண்ணும் விலங்கு.

     சண்டாளன் = கொடியவன். சண்டாளி = கொடியவள்.

     சண்டாளம் = கொடுந்தன்மை.

     ஆளன், ஆளி என்னும் தமிழ்ப் பாலீறுகளை நோக்குக.

சண்டன் - சண்ட (c)

சண்டாளம் - சண்டால (c)

சண்டாளன் - சண்டால (c)

சண்டாளி - சண்டாலீ (c)

சண்டி + சண்டீ (c)

     வடவர் காட்டும் சண்ட் (c) என்னும் மூலத்தை derived fr. ca‹d.
a என்று மா.வி. அ. கூறுதல் காண்க.

சண்ணம் - சிச்ன (sisna) இ.வே.

     சுண் - சண். சண்ணுதல் = புணர்தல்.

     சண் - சண்ணம். சண்ணக்கடா = பொலிகடா.

     துளைத்தற் பொருளுள்ள ச்னத் (snath) என்னும் சொல்லை
வடவர் மூலமாகக் காட்டுவர்.

சண்பகம் - சம்பக (c)

"மல்லிகை மௌவல் மணங்கழ் சண்பகம்"
(பரிபா. 12:77)

சணல் - சண (s) - அ.வே.

     சள்ளுதல் = சிக்குதல். சடாய்த்தல் = அடர்ந்து வளர்தல்.

     சடை = நார். சடைத்தேங்காய் = நார்த்தேங்காய்.

     சடை - சடம் - சடம்பு = நாருள்ள சணற்செடி.

     சடம் - சணம் = சணல். சணம் - சணம்பு = சணல்.

     சணம்பு - சணப்பு = சணல். சணப்பு - சணப்பை = சணல்.

     சணப்பு - சணப்பன் = சணலிலிருந்து நாருரிக்கும் குலத்தான்.

     "சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக் கொண்டது"
என்பது பழமொழி.

     சணம் - சணல்.

சதங்கை - ச்ருங்கலா (s, kh)

     சல்-சல-சலங்கை-சதங்கை. ஒ.நோ : கல் - கல - கலம்பு -
கலம்பம் - கதம்பம்.