பக்கம் எண் :

146வடமொழி வரலாறு

     "தன்றிரு நாமத்தைத் தானுஞ் சாத்தியே" (கம்பரா. கடிமண. 49). 3.
     சந்தனம் பூசுதல்.

     'சாத்தியருளச் சந்தன முக்கசும்' (S.I.I. III. 187).

     சாத்து-சாந்து = 1. சுண்ணாம்புச் சேறு. 2. அரைத்த சந்தனம்.

     "புலர்சாந்தின் வியன்மார்ப" (புறம்.) 3. சந்தனமரம். ம. சாந்து.

     "சாந்துசாய் தடங்கள்" (கம்பரா. வரைக்காட்சி. 44).

     4. நெற்றிப் பொட்டுப் பசை. க. சாது. 5. எட்பசை.

     "வெள்ளெட் சாந்து" (புறம். 246).

     சாந்து-சாந்தம் = சந்தனம். "சாந்த நறும்புகை" (ஐங். 258).

     சாந்து-சந்து = சந்தன மரம்.

     "வேரியுஞ் சந்தும்" (திருக்கோ. 301).

     சந்து - சந்தனம்.

சாமை - ச்யாமா

     சமை - சாமை. "சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால்
     தெரியும்" என்பது பழமொழி.

     வடவர் கரியது என்று பொருட்காரணம் கூறுவர். சாமை
     கரிதாயின்மை காண்க.

சாய் - சி (இ.வே.)

     சாய்தல் = படுத்தல்.

     "திருக்கையிலே சாயு மித்தனை" (ஈடு, 2 : 7 : 5).

     சாய்கை = படுக்கை.

     வ. சய = படுக்கை, தூக்கம். சயன = படுக்கை, தூக்கம்.

சாயுங்காலம் - சாயம் (ஸ) - இ.வே.

     கதிரவன் சாயுங்காலத்தைப் பொழுது சாய்கிற வேளை என்பது
இன்றும் பெருவழக்கான உலக வழக்கு.

     ஆங்கிலரும் decline என்று கூறுதல் காண்க.

     சாயுங்காலம் - சாயங்காலம் - சாய்ங்காலம். இது வெளிப் படை.

     வடவர் ஸோ என்பதை மூலமாகக் காட்டுவர். ஸோ=அழி, கொல்,
முடி. சாயம் - நாள்முடிவு. இங்ஙனம் வடசொல்லாகக் காட்டுவதற்கே,
சாயுங்காலம் என்னும் வடிவைச் சென்னைப் ப. க. க. அகரமுதலியிற்
காட்டாது விட்டிருக்கின்றனர்.