பக்கம் எண் :

152வடமொழி வரலாறு

     சிலர், மங்கலமானவன், நன்மை செய்பவன் என்று பொருள் கூறுவர்.

     சிவன் தமிழ்த் தெய்வமாதலானும், நெருப்பின் கூறாகக்
கொள்ளப்படுதலானும்,முத்தொழில் முதல்வன் என்பதே தமிழ்க்கொள்கை
யாதலானும், குமரிக்கண்டத்திலேயே சிவ வணக்கம் தொடங்கி
விட்டமையானும், ஆரியவழிப் பொருட் காரணம் ஒருசிறிதும் பொருந்தா.

     சிவன் - சிவை (மலைமகள்).

சிவை - சிவா

சிவிகை - சிவிகா, சிபிகா

     சிவிதல் = சுருங்குதல். சிவிந்தபழம் = முற்றாது சுருங்கிப்போன
பழம். சிவிங்கி = சிறுத்தைப்புலி.

     சிவிகை = இருவர் தூக்கும் சிறிய மூடுபல்லக்கு.

சிற்பம் - ஸ்வல்ப

     சிற் - சிற்பு - சிற்பம் = மிகக் கொஞ்சம்.

     "சிற்பங்கொள் பகலென" (கம்பரா. சடாயுகாண். 8).

சீகாழி - ஸ்ரீகாலீ

     திரு - ஸ்ரீ. காளி - காலீ. திருக்காளி - திருக்காழி - ஸ்ரீகாழி -சீகாழி.
     சிலர் சீர்காழி - சீகாழி என்பர்.

சீம (தெ.) - ஸீமிக = எறும்பு.

சீர்த்தி - கீர்த்தி (அ.வே.)

     சீர் = 1. பெருமை. "சீர்கெழு கொடியும்" (புறம். 1).

     2. மதிப்பு. "வணக்கருஞ் சீர்...மன்னன்" (பு.வெ. 9 : 22).

     3. புகழ். "ஆனாச்சீர்க் கூடலுள்" (கலித். 30).

     சீர்த்தல் = சிறத்தல்.

     "பொருடன்னிற் சீர்க்கத் தருமேல்" (திவ்.திருவாய். 8:7:6).

     சீர்-சீர்த்தி = மிகுபுகழ். "சீர்த்தி மிகுபுகழ்." (தொல். சொல்.313).

     சீர்த்தி - கீர்த்தி = புகழ். "விண்சுமந்த கீர்த்தி" (திருவாச.8:8).

     கீர்த்திமான் = புகழ்பெற்றவன். கீர்த்தி - கீர்த்திமை.

"அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி"

(திவ்.திருப்பா.13)