|
சிலர்,
மங்கலமானவன், நன்மை செய்பவன் என்று பொருள் கூறுவர்.
சிவன்
தமிழ்த் தெய்வமாதலானும், நெருப்பின் கூறாகக்
கொள்ளப்படுதலானும்,முத்தொழில் முதல்வன் என்பதே தமிழ்க்கொள்கை
யாதலானும், குமரிக்கண்டத்திலேயே சிவ வணக்கம் தொடங்கி
விட்டமையானும், ஆரியவழிப் பொருட் காரணம் ஒருசிறிதும் பொருந்தா.
சிவன்
- சிவை (மலைமகள்).
சிவை - சிவா
சிவிகை - சிவிகா,
சிபிகா
சிவிதல்
= சுருங்குதல். சிவிந்தபழம் = முற்றாது சுருங்கிப்போன
பழம். சிவிங்கி = சிறுத்தைப்புலி.
சிவிகை
= இருவர் தூக்கும் சிறிய மூடுபல்லக்கு.
சிற்பம் - ஸ்வல்ப
சிற்
- சிற்பு - சிற்பம் = மிகக் கொஞ்சம்.
"சிற்பங்கொள்
பகலென" (கம்பரா. சடாயுகாண். 8).
சீகாழி - ஸ்ரீகாலீ
திரு
- ஸ்ரீ. காளி - காலீ. திருக்காளி - திருக்காழி - ஸ்ரீகாழி -சீகாழி.
சிலர் சீர்காழி - சீகாழி என்பர்.
சீம (தெ.) - ஸீமிக
= எறும்பு.
சீர்த்தி - கீர்த்தி
(அ.வே.)
சீர்
= 1. பெருமை. "சீர்கெழு கொடியும்" (புறம். 1).
2.
மதிப்பு. "வணக்கருஞ் சீர்...மன்னன்" (பு.வெ. 9 : 22).
3.
புகழ். "ஆனாச்சீர்க் கூடலுள்" (கலித். 30).
சீர்த்தல்
= சிறத்தல்.
"பொருடன்னிற்
சீர்க்கத் தருமேல்" (திவ்.திருவாய். 8:7:6).
சீர்-சீர்த்தி
= மிகுபுகழ். "சீர்த்தி மிகுபுகழ்." (தொல். சொல்.313).
சீர்த்தி -
கீர்த்தி = புகழ். "விண்சுமந்த கீர்த்தி" (திருவாச.8:8).
கீர்த்திமான்
= புகழ்பெற்றவன். கீர்த்தி - கீர்த்திமை.
"அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி"
|
(திவ்.திருப்பா.13)
|
|