ச்ரு
என்னும் சிதைசொல்லினின்றே ச்ருதி (கேள்வி, மறை),
ச்ரோத்ரிய, ச்ரவண, ச்ராவண முதலிய சொற்கள் பிறக்கும்.
சே - க்ஷி2
(இ.வே) = தங்கு, வதி.
சேத்தல்
= தங்குதல்
"பைத
லொருதலை சேக்கு நாடன்" |
(குறுந்.
13)
|
|
|
"கான
மஞ்ஞை கணனொடு சேப்ப" |
(புறம்.
127)
|
க்ஷி
என்னும் சொல்லினின்றே க்ஷேத்ர என்னும் சொல் திரியும்.
க்ஷேத்ர
= தங்குமிடம், மனை, நகர், இடம், திருவிடம்.
சேக்கை
= 1. கூடு. "சேக்கை மரனொழியச் சேணீங்கு புள்"
(நாலடி. 30). 2. கட்டில்.
சேத்தல்
= தங்கியுறங்குதல்.
"கயலார்
நாரை போர்விற் சேக்கும்" |
(புறம்.24:20)
|
சேம்பு - கேமுக
சேம்பு
= ஒருவகைக் கிழங்கு.
"சிலம்பிற்
சேம்பி னலங்கல் வள்ளிலை" |
(குறுந்.
76)
|
சேமம் - க்ஷேம
இது
முன்னரே விளக்கப் பெற்றது.
சேரலம் - கேரல
சேரல்
= சேரன். சேரல் - சேரலம் - வ. கேரல - கேரள.
சேலை - சேல (c)
சீரை
- சீலை - சேலை (பிங்.).
வடவர்
சில் (c) என்றொரு செயற்கை மூலத்தை அமைத்துக்
கொண்டு ஆடையணிதல் என்று பொருள் கூறுவர்.
சொம்1
- ஸ்வ (இ.வே.)
சும்மை
= தொகுதி, கூட்டம்.
சும்
- சொம் - (சொந்து) - சொந்தம் = தன்னொடு கூடியது.
சொம்2
- ஸ்வ - ஸ்வாம் (இ.வே.)
சும்
- சும்மை = தொகுதி, செல்வத்தொகுதி.
சும்
- சொம் = சொத்து. முதுசொம் = முன்னோர் தேட்டு.
|