பக்கம் எண் :

46வடமொழி வரலாறு

14. முக்கால வடமொழித் தமிழ்ச்சொற்கள்

     வடமொழியிலுள்ள தமிழ்ச்சொற்கள் பின்வருமாறு மூவேறு
காலத்திற் புகுந்தனவாகும்.

(1) மேலையாரியத் தமிழ்ச்சொற்கள்
எ-டு :
     
தமிழ் மேலையாரியம் வடமொழி
     
அம்மை அம்மா,மம்மா அம்பா
     
இரும்பு இரன்,அயெர்ன்,ஈரிஸ் அயஸ்
     
உகை-அகை அகோ(g) அஜ்
     
நாவாய் நாவிஸ்,நௌஸ் நௌ
     
பொறு பெர்(b),பெர்(f),பெர்(bh) பர்(bh)
     
வலி, வலம் வலி பல(b)
     
(2) வேதத் தமிழ்ச்சொற்கள
     
எ-டு : தமிழ் வேதமொழி
     
  ஆணி
ஆணி
     
  கடு-கடுகு-கடுகம்
கடுக
     
  சுவணம் சுபர்ண
     

(3) சமற்கிருதத் தமிழ்ச்சொற்கள்
     
எ-டு: தமிழ் சமற்கிருதம்
     
  மீன் - மீனம் மீன
     
  முகம் முக (kh)
     

15 . மேலையர் திரிபுணர்ச்சி

     மேலையறிஞரும் ஆராய்ச்சியாளரும், தமிழைச் செவ்வையாய்
ஆராயாமையாலும் இனவுணர்ச்சியாலும் சில முற்கோளாலும் (prejudices),
வடமொழியாளரை முற்றும் நம்பித் தமிழைப்பற்றித் தவறான கருத்துகளைக்
கொண்டுள்ளனர். அவையாவன :

(1) தமிழர் (அல்லது திரவிடர்), நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்து இந்தியாவிற் குடிபுகுந்து, ஆரியரால் தென்கோடிக்குத் துரத்தப்பட்டார் என்பது.
   
(2) சமற்கிருதத்தினின்று பிராகிருதம் பிறந்ததென்பது.

     பேரா. பரோ இந்திய ஆரியத்தைப் பின்வருமாறு முந்நிலை யாய்
வகுத்திருக்கின்றார்.