பக்கம் எண் :

முன்னுரை49

இனி, இதற்குச் சார்பாகவே இற்றைத் தமிழர் நிலைமையும் பின்வருமாறு
உள்ளது:

1. ஆயிரக்கணக்கான முதலிரு கழகத் தனித்தமிழ் நூல்களும்
அழிந்தும் அழிக்கப்பட்டும் போனமை.
   
2. இற்றைத் தமிழ்நூல்களிலெல்லாம் வடசொல்லோ ஆரியக்
கருத்தோ சிறிதும் பெரிதும் கலந்துள்ளமை.
   
3. தமிழர் குமுகாய (சமுதாய)த் துறையில் பிராமணருக்குக்
கீழ்ப்பட்டிருத்தலும், அதை எதிர்க்கும் தன்மான வுணர்ச்சி
அவருக்கின்மையும்.
   
4. நூற்றிற் கெண்பதுபேர் எழுத்தறியாதிருப்பதும் பெரும்
பாலார்க்குத் தாய்மொழியுணர்ச்சி யின்மையும்.
   
5. பிறப்பொடு தொடர்புபட்ட ஆரியக் குலப்பிரிவினையால்
சின்னபின்னமாய்ச் சிதையுண்டு, நாட்டின வுணர்ச்சியும்
ஒற்றுமையுமின்றி முந்தியல் குக்குலங்கள் போல்
வேறுபட்டிருத்தல்.
   
6. கோயில் வழிபாடும் இருவகைச் சடங்கும் பெரும்பாலும்
பிராமணப் பூசாரியரால் வடமொழியில் நடத்தப்பட்டு வருதல்.
   
7. தந்நலப் போலித் தமிழ்ப் புலவர், தலைமைத் தமிழ்ப்
பேராசிரியப் பதவிகளைக் கைப்பற்றித் தமிழாக்க
முயற்சிகளையெல்லாம் தடுத்து வருதல். இதனால் மேனாட்டார்
தமிழின் சிறப்பை அறிதற்கு இதுவரை வாய்ப்பு நேர்ந்ததில்லை.
   
8. தமிழ்நாட்டு அரசும் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களும்
தமிழைப் போற்றாமை.
   
9. தமிழ்நாட்டுத் தலைமைப் பதவிகளைப் பெரும்பாலும்
தமிழரல்லார் தாங்கி வருதல்.

16. தென்மொழி வடமொழி வேறுபாடு

     செந்தமிழாகிய தமிழும் கொடுந்தமிழாகிய திரவிட மொழிகளும்
சேர்ந்தது தென்மொழியாகும்.

தென்மொழி வடமொழி
     
(1)
தெற்கில் தோன்றியது. வடக்கினின்று வந்தது
     
(2) இயற்கையாய்
அல்லதுதானாய்த்தோன்றிய
இயன்மொழி
திராவிடத்தினின்று
திரிந்துதமிழால்
வளம்படுத்தப்பெற்ற
திரிமொழி.