பக்கம் எண் :

50வடமொழி வரலாறு

(3) தூய ஓரினத் தாய்மொழி. ஈரினக் கலவை மொழி.
     
(4) உலக வழக்கு மொழி.வாழும் உண்ணிமொழி. வழங்கா நூன்மொழி;
அதனால்பிறமொழிகளையே சார்ந்து வாழும் உண்ணிமொழி.
     
(5) இந்திய ஐரோப்பிய மொழிக்
கோவையின முதனிலை
இந்திய ஐரோப்பிய
மொழிக்கோவையின் இறுதிநிலை.
     
(6) மென்மொழி. வன்மொழி
     
(7) இயற்கைப் பால் மொழி. செயற்கைப் பால் மொழி.
     
(8) பொருளிலக்கணத்தால்
இலக்கண நிறைமொழி.
பொருளிலக்கணமின்மையால்
இலக்கணக் குறைமொழி.
     
(9) செம்மை வரம்பு மொழி. செம்மை வரம்பிலா மொழி.
     
(10) பெரும்பாலும் மூல இலக்கிய
மொழி.
பெரும்பாலும் மொழிபெயர்ப்
பிலக்கிய மொழி.
     
(11) உண்மை, சமன்மை, அன்பு
முதலியவற்றை உணர்த்தும் பண்பாட்டு மொழி.
பொய்ம்மை, பிரிவினை, ஒருகுல முன்னேற்றம் முதலியவற்றை யுணர்த்தும் பண் பாடற்ற மொழி.
     
(12) மக்கள் மொழியென்றுஒப்பும் மொழி. தேவ மொழியென்று ஏமாற்றும்
மொழி.

17. தென்மொழி வடமொழிப் போராட்டம்

     தென்னாடு வந்த வேதப் பிராமணரையும் அவர் வழியினரை யும்
நிலத்தேவரென்றே தமிழர் நீண்டகாலம் நம்பியதினாலும், அவ் வாரியரும்
தமிழ்வழி நூலியற்றித் தமிழ்ப்பற்றினர்போல் நடித்துத் தமிழர்க்குப்
புலனாகாவாறு சன்னஞ் சன்னமாய் ஆரியக் கருத்து களை நுண்ணிதிற்
புகுத்தி வந்ததினாலும், திருவள்ளுவர் காலம் வரை ஆரியத் தீங்கு தமிழர்
கண்ணிற்குத் தெரியாது மறைந்திருந்தது.

"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்."
(972)
   
"அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்."
(300)
   
"மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்."
(134)
   
"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்."
(560)