பக்கம் எண் :

82வடமொழி வரலாறு

ஆம்1-ஆம்

     ஆ-ஆகு-ஆகும்-ஆம் (yes). ம. ஆம், தெ. அவுனு

     'ஆம்' வடமொழியில் மூலமில்லா உடன்பாட்டிடைச் சொல்.

ஆம்2-ஆப்

     ம்-ஆம்-நீர். "ஆமிழி யணிமலை" (கலித். 48).

ஆமணக்கு-ஆமண்ட

     "ஆமணக்கு நட்டால் ஆச்சா வாகுமா?" என்பது பழமொழி. சிற்றாமணக்கு, காட்டாமணக்கு (ஆதளை) என்பன ஆமணக்கு வகைகள்.

     வடசொல் அமண்ட, மண்ட என்னும் வடிவுங் கொள்ளும்.

ஆயம்-ஆய (இ. வே.)

     தாயம்-ஆயம் = உரிமை, கடமை, கடத்தக்கூலி, தாய ஆட்டக்காய் தாய எண் அல்லது பணையம்.

"உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்"

(குறள். 933)
 
"ஆயத்திற் கஞ்சி ஆற்றில் நீந்தினதுபோல்"  

என்பது பழமொழி.

     இருக்கு வேதத்தில் ஆய என்னும் சொல் வந்துசேர்கை என்னும்
பொருளில் ஆளப்பட்டுள்ளது (II,38 : 20). பாணினீயம், மனுஸ்மிருதி,
மகாபாரதம் முதலிய பின்னூல்கள் வருவாய், வரி, ஊதியம் முதலிய
பொருள்களில் அதை ஆள்கின்றன. ஆய என்னும் சொற்கு ஆ-இ
என்னும் மூலங் காட்டுவர். இ என்பது இய் என்னும் தென்சொல்லின்
சிதைவாம். இய் - இயல், இயங்கு.

     இனி, ஆம் என்னும் சொற்கு வருவாய் என்று பொருள்
கொள்ளினும், ஆ என்னும் அதன் முதனிலையை வா என்பதன் திரிபாகக்
கொள்க.

ஆயிரம் - ஸகஸ்ர (இ.வே.)

     அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம்.

     ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமா யிருப்பதால்,
மணற்பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று.

"வாழிய...நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே"

(புறம். 9)