பக்கம் எண் :

மொழியதிகாரம்85

"அண்ணலோர் விருத்தன்போல் வந்தாவண
வோலை காட்டி"

(கந்தபு.வழிநடை. 12)


     ஆவணமாக்கள் = உரிமை அல்லது கடமைச் சூள் வாங்குவோர்.

"பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின்" (அகம். 77)

ஆளத்தி - ஆலப்தி (ஆ + லப்தி)

     ஆலத்தி - ஆளத்தி = ஒரு பண்ணை வலிவு மெலிவு சமன்
என்னும் முந்நிலையுந் தழுவ மண்டலித்துப் பாடுதல் அல்லது இசைத்தல்.

     ஆலத்தி சுற்றுதல் கட்புலனும், ஆளத்தி சுற்றுதல் செவிப் புலனும்
ஆகும் .

     லப் என்னும் வடசொற்கு, அலப்புதல், பிதற்றுதல், புலம்பல்,
விளித்தல், சொல்லுதல் என்ற பொருள்களே உள. ஆளத்தி என்னும்
தமிழ்ச்சொற் கொப்பாக, ஆ - லப் என்னும் புனைசொல்லினின்று ஆலாப, ஆலாபன முதலிய சொற்களைத் திரித்திருப்பதாகத் தெரிகின்றது.

இகம் - இஹ (இ. வே.)

     இ - இகு - இகம் = இவ்வுலகம். இகு - இங்கு - இங்கண்.

     முச்சுட்டும் முதலில் தமிழிலேயே தோன்றினவென்பது பின்னர்
விளக்கப்பெறும்.

இசி - ஹஸ்

     இளித்தல் = பல்லைக் காட்டுதல், சிரித்தல். இளி = சிரிப்பு (பிங்.).
இளி - இசி. இசித்தல் = சிரித்தல்.

     ஹாஸ்ய ரஸ = நகைச்சுவை.

இஞ்சிவேர் - ச்ருங்கவேர

     இஞ்சி என்பது தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் விளைந்து
வரும் மருந்துப் பூண்டு.

"செய்யாப் பாவை வளர்ந்து
கவின்முற்றிக்காயங் கொண்டன இஞ்சி"
(மலைபடு. 125-6)
"இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டி"
(பதிற். 42 : 10)
"மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்து"
(சிலப். 10:74)

     இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். இஞ்சு - இஞ்சி.

     இஞ்சி காய்ந்தாற் சுக்கு. சுக்கு= நீர்வற்றியது.