|
இங்ஙனமிருந்தும்,
சூசி என்பதினின்று ஊசி என்பது திரிந்துள்ளதாக,
பிராமணத் தமிழ்ப்பண்டிதர் சென்னைப் ப. க. க. த, அகரமுதலியிற்
காட்டியிருப்பது எத்துணை நெஞ்சழுத்தம்!
ஊதை - வாதை (இ.
வே.)
ஊ
- ஊது - ஊதை = 1. காற்று (திவா.) 2. வாடைக்காற்று,
"பனிப்புலர்
பாடி...... ஊதை யூர்தர" (பரிபா. 11: 84).
3.
வளி(வாத) நோய்.
"தலைவலி
பன்னமைச்ச லூதை" (தைலவ. தைல. 7).
வடமொழியார்
வா (blow) என்பதை மூலமாகக் கொள்வர்.
அது ஊ என்பதன் திரிபே.
ஊர் - ரோஹ் (இ.
வே.)
உர்
- உறு - உறி = உயரத் தொங்கவிடும் தூக்கு.
உறு
- உறை = உயரம் (பிங்.).
உர்
- ஊர். ஊர்தல் = 1. ஏறுதல். "ஊர்பிழிபு.....வந்தன்று"
(ஐங்.
101). 2. ஏறிச்செல்லுதல்.
| "சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான்" |
(குறள்.
37)
|
வடமொழியார்
காட்டும் ருஹ் (to ascend) என்னும் மூலம் ஊர்
என்பதின் முறைமாற்றுத் திரிபே (metathesis).
ஊர்-ஊர்த்தம்.
ஒ.நோ: நேர் - நேர்த்தம். ஊர்த்தம் - ஊர்த்வ
(urdhva) உயர்ந்த, தூக்கிய (இ. வே.).
எருமை - ஹெரம்ப
இர்
- இரு - இருமை = கருமை. இருமை - எருமை = கரிய
மாட்டினம்.
ம.
எரும, து. எர்மெ, தெ. எனுமு, க, எம்மெ.
எல்லரி - ஜல்லரீ
(jh)
எல்லரி
= பறைவகை. "வல்வா யெல்லரி" (மலைபடு. 10).
ஏது - ஹேது
ஏ
- ஏவு - ஏசு - ஏது.
ஏசுதல்
- ஏவுதல், செலுத்துதல்.
| "கொல்லம்
பேசி" |
(தேவா.
380 : 6)
|
ஏது
= ஏவுகை. தூண்டுகை, காரணம்.
|