பக்கம் எண் :

மொழியதிகாரம்97

     ஏது நிகழ்ச்சி = கருமங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக்
கொடுத்தற்குத் தோன்றுகை.

     "ஏது நிகழ்ச்சி யெதிர்ந்துள தாதலின்" (மணிமே. 3 : 4)

     ஏது - ஏதன் = மூலக்காரணனான கடவுள்.     

"ஏதனை யேதமிலா விமையோர்தொழும்
வேதனை"
(தேவா. 471: 3)

     வடவர் வடசொற்குக் கூறும் வேர்ப்பொருளும் தூண்டுதல் என்பதே.
அதற்குக் காட்டும் வேர் ஏவுதற் பொருளுள்ள ஹி என்பதாகும்.

ஏ - ஹி

     "கூறுத லுசாத லேதீடு தலைப்பாடு" (தொல். பொருள்.207)

     ஏதீடு = காரணமிட்டுரைத்தல்.

ஏமம் - க்ஷேம (இ.வே.)

     உ - இ - எ - ஏ.

     ஏ = 1. உயர்ச்சி. "ஏபெற் றாகும்" (தொல். சொல். 305).

     2. மேனோக்குகை.      

"கார்நினைந் தேத்தரும் மயிற்குழாம்"
(சீவக. 87)

     ஏக்கழுத்தம் = தலையெடுப்பு.

     ஏண், ஏத்து, ஏந்து, ஏப்பம், ஏர், ஏல், ஏவு, ஏறு முதலிய
சொற்களின் ஏகாரமுதல், எழுச்சி அல்லது உயர்ச்சிக் கருத்தைத் தாங்கி
நிற்றலையும், எகர முதலும் இங்ஙனமே பல சொற்களில் உணர்த்தி
நிற்றலையும் நோக்குக.

     இருதிணை யுயிரிகளும், நெருங்கிவந்த பகைக்கும் பகை வர்க்கும்
தப்பியோடிப் பாதுகாப்பிற்குத் தேடுவது, பெரும்பாலும் மறைவிடம்
அல்லது உயரிடமே. இவற்றுட் பின்னது மிகச் சிறப்பாம்.

     அரிமாவிற்குத் தப்பி மரத்தின் மேலேறுவதும், அரசிற்குத் தப்பி
மலையின்மேலேறுவதும் இன்றும் வழக்கம். சிற்றரசரும் கொள்ளைத்
தலைவரும் பண்டைக்காலத்தில் மலைகளையே அரணாகக்
கொண்டிருந்தனர். இதனால், உயர்ச்சியைக் குறிக்கும் ஏகாரத்தை
அடியாகக் கொண்டு பாதுகாப்புக் கருத்துச் சொற்பிறந்தது.

     ஏ - ஏம் = 1. காப்பு. "எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி"
(திருமுரு.97) . 2. இன்பம்.