|
"ஏமுற
இனிதி னோம்பி" (கம்பரா. விபீட. 114).
ஏம்
+ உறு = ஏமுறு. ஏமுறுதல் = காப்படைதல்.
ஏம்
- ஏமை - யாமை = பாதுகாப்பான ஓடுள்ள ஊருயிரி.
"யாமை
யெடுத்து நிறுத்தற்றால்"
|
(கலித்.
94)
|
யாமை
- ஆமை. ஒ.நோ: யானை - ஆனை.
ஏம்
+ மரு = ஏமரு. ஏமருதல் = காக்கப்படுதல்.
"இடிப்பாரை
யில்லாத ஏமரா மன்னன்"
|
(குறள். 448)
|
ஏம்
- ஏமா. ஏமாத்தல் = அரணாதல்.
"இயற்பகை
வெல்குறுவான் ஏமாப்ப முன்னே"
|
(பழ.
306)
|
| |
|
"எழுமையு
மேமாப் புடைத்து"
|
(குறள்.
126)
|
ஏம்
= ஆர் = ஏமார். ஏமார்த்தல் = வலுப்படுத்தல்.
"சலத்தாற்
பொருள்செய் தேமார்த்தல்"
|
(குறள்.
660)
|
ஏம்
+ மாறு = ஏமாறு. ஏமாறுதல் = காப்பழிதல், வஞ்சிக்கப்படுதல்.
ஏமாறு - ஏமாற்று (பி. வி.)
ஏம்-ஏமம்:
1.காப்பு, பாதுகாப்பு. "ஏமப் பேரூர்" (தொல்.983).
2.
காவல்.
"எல்லா
வுயிர்க்கும் ஏம மாகிய" (புறம். 1: 11).
"ஏம
முரசம் இழுமென முழங்க" (புறம். 3: 3).
3.
வைப்புச் சொத்து (திவா.).
4.
பாதுகாப்பான இராக்காலம், நள்ளிரவு, இரா.
"புறங்காட்டி
லேமந்தோறு மழலாடுமே" (தேவா. 965:7).
5.
இன்பம் (திவா.).
ஏமம்
- சேமம். ஒ.நோ : ஏண் - சேண்.
சேமம்-பாதுகாப்பு,
நலம், இன்பம், நல்வாழ்வு, அரண், சிறைச் சாலை,
புதைபொருள், சுவடிக்கட்டு, கவசம், சவக்காப்பு.
சேமம் - க்ஷேம (இ.வே.)
தங்குதலை
அல்லது குடியிருத்தலைக் குறிக்கும் க்ஷி என்னும்
முதனிலையை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாமை காண்க.
ஏலம் - ஏலா
|