பக்கம் எண் :

மொழியதிகாரம்107

(3) சொற்றிரிப்பு. எ-டு: அப்பம்-அபூப, பேசு-பாஷ்.
   
(4) எழுத்துக் குறைப்பு. எ-டு: மண்டலம்-மண்டல.
   
(5) எழுத்துச் சேர்ப்பு. எ-டு: மயிர்-மசிர்-ச்மச்ரு (வ.).
   
(6) முன்னொட்டுச் சேர்ப்பு. எ-டு: காயம் - ஆகாச, ஆயிரம்
ஸகஸ்ர.
   
(7) பின்னொட்டுச் சேர்ப்பு:

எ-டு:-தாமரை-தாமரஸ (எழுத்து)
சதுரம்-சதுரஸ்ய (அசை)
வடவை-வடவாமுக (சொல்)
   
(8) இடைச்செருகல். எ-டு: திடம்-த்ருட, மெது-ம்ருது, சொம்-
ஸ்வாம்
   
  (9) முறைமாற்று (Metatheiss).

எ-டு: கதவம்-கபாடம்.
   
(10) தவற்று மூலம்

1. பொருள் மாற்று. எ-டு: இஞ்சிவேர்-ச்ருங்கவேர,
  முத்தம்-முக்தா.

2. தவற்றுப் பிரிப்பு. எ-டு: குமரன்-கு+மார, சுவணம் ஸு +பர்ண
   
(11) இடுகுறியெனல்.
   
(12) தேவமொழியெனல்.
   
(13) கதை கட்டல். எ-டு: சொலவம்-ச்லோக. சோக-ச்லோக (கதை)

     வான்மீகி ஒரு வேடனாற் கொல்லப்பட்ட பறவையைக் கண்டு
துயருற்றபோது முதற்செய்யுளை யியற்றியதினால், செய்யுள் சுலோகம்
எனப் பெயர் பெற்றதென்பது கதை கட்டல்.

10. சுட்டுச் சொற்கள்

     தமிழிலும் திரவிடத்திலுமுள்ள சுட்டுச் சொற்கள், ஆ (அ), ஈ
(இ), ஊ (உ) என்னும் மூன்று சுட்டொலிகளும் அவற்றின் வளர்ச்சியுமாகும்.
சுட்டொலிகள் மூன்றும் கைச்சுட்டை யொத்த வாய்ச் சுட்டொலிகளாகத்
தோன்றியவை. வாய்ச்சுட்டாகத் தோன்றக்கூடிய ஒலிகள் ஆ ஈ ஊ என்னும்
மூன்றே. வாயை விரிவாய்த் திறப்பதால் சேய்மைச் சுட்டாகிய ஆகாரமும்,
வாய்மூடியாகிய உதட்டைப் பின்னுக்கிழுப்பதால் அண்மைச் சுட்டாகிய
ஈகாரமும், அதை முன்னுக்குக் குவிப்பதால் முன்மைச் சுட்டாகிய ஊகாரமும்,
பிறக்கின்றன.