பக்கம் எண் :

170வடமொழி வரலாறு

8. ஆரிய ஏமாற்றிற் காளா யடிமைமடப்
பூரிய வாழ்வழுந்திப் போந்தமிழா - சீரிய
செந்தமிழ் மானஞ் சிறந்துரிமை பெற்றுயர்க
முந்திய தென்னோர் முறை.
   
9. ஒருமுறை யேமாறின் ஏமாற்றி குற்றம்
மறுமுறை யேமாறி குற்றம் - பலமுறையும்
ஏமாறும் பேதை யியல்பன் தமிழனெனின்
ஆமாறே யில்லை யறி.
   
10. மொழியே யினமக்கள் முன்னேற நல்ல
வழியாம் அதனை வளர்க்க - பழியாய்த்
தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்காண் முன்போல்
தமிழுயரத் தானுயர்வான் தான்.
   
11. பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி
மிகுத்ததனா லில்லையொரு மேன்மை - வகுத்தநன்னூற்
கற்றைகளைத் தின்றாலுங் காளவாய் நல்லறிவு
பெற்றிடுமோ எத்துணையும் பேசு.
   
12. உடம்பளவில் மாந்தர் உயர்திணைய ராகார்
மடந்தவிரும் நல்லறிவு மானம் - திடம்பெறவே
தாழ்வுணர்ச்சி நீங்கித் தகுநற் றொழிலொழுக்கம்
வாழ்வுயர்ச்சி காணும் வழி.
   
13. அடிமைத் தனத்தின் அடிநீக்கி யின்றே
குடிமைத் தனந்தமிழா கொள்க - மடிமை
இருக்குந் தமிழையும் இல்லாத தாக்கும்
தருக்கும் பெயருந் தப.
   

14.
செங்கதிரின் நீண்மறைவிற் செந்தமிழும் ஆரியத்தால்
மங்கி மறைந்தநிலை மாய்ந்ததினால் - எங்குமினி
மூல மொழியென முத்தமிழே யாளுகின்ற
கால மணுகியதே காண்.
   
15. குப்பை யுயர்ந்தது கோபுரந் தாழ்ந்ததெனத்
தப்பி வடமொழி தான்கவர்ந்த - செப்பத்
குமரியனை யென்றதைக் கொண்டு.
   
16. மறைமலை மாணடிகள் மாபெயர் வாழி
நிறைமொழி முத்தமிழ் வாழி - இறைமொழியான்
என்னும் வடமொழியும் ஏமாற்றா தெந்நிலத்தும்
மன்னுக நூன்மொழி மற்று.