110 | `வா' என்னும் வினைச்சொல் வரலாறு |
| `வா' என்னும் வினைச்சொல் வரலாறு | வள்-வர்-வார்-வ. வர்-வரு. | சொல்லாக்கத்தில் ட த ல ழ ள ஐந்தும் ரகரமாகத் திரியும். அத் திரிவில் லகரளகரம் பேரளவும், அவ் விரண்டனுள்ளும் ளகரம் பெரும்பான்மையும், ஆகும். | எ-டு : | | ட - ர : | கடு-கடி-கரி, படவர்-பரவர். | த - ர : | விதை-விரை. | ல - ர : | உலவு-உரவு, குலவை-குரவை, குதில்-குதிர்,பந்தல்-பந்தர். | ழ - ர : | புழை-புரை. | ள - ர : | அள்-அர்-அரு-அருகு, கள்-கர்-கரு,சுள் - சுர், தெளி- தெரி, நீள்-நீர், பிள்-பிர்-பிரி,முள்-முர்-முரு-முருகு (இளமை), விள்- விர்-விரி. | | முதற்காலத்தில் முதனிலையாக வழங்கி வந்த சில வினைச் சொற்கள் வழக்கற்றுப் போனதினால், இன்று அவற்றிற்குத் தலைமாறாக அவற்றின் தொழிற் பெயர்களே தமித்தும் துணைவினையொடு கூடியும் வழங்கி வருகின்றன. | எ-டு: | | | | முதனிலை | முற்காலப் புடைபெயர்ச்சி | இக்காலப் புடைபெயர்ச்சி | | நகு | நக்கான் | நகைத்தான் | | தள் | தட்டான், தட்கின்றான், | தளைத்தான், | | | தட்பான் | தளைக்கின்றான், | | | | தளைப்பான் | | கள் | கட்டான், கட்கின்றான், | களவுசெய்தான், களவு | | | கட்பான் | செய்கின்றான், களவு | | | | செய்வான். | | | களவாண்டான், களவாள்கின்றான், களவாள்வான்; களவாடி னான், களவாடுகின்றான், களவாடுவான்; என்பனவும் தொழிற்பெயர் துணைவினை கூடி முதனிலையாகிப் புடைபெயர்ந்தனவே. ஆள், ஆடு என்பன துணைவினைகள். களவுபண், களவடி, களவுகாண் என்பனவும் துணைவினை கொண்டனவே. |
|
|