பக்கம் எண் :

பீடிகை

யெல்லாம் பார்த்து வரக்கூடிய வல்லமை உடையது; அதைப் பயன்படுத்தி இன்பமடையாமல் எந்த நிமிஷத்திலும் உன்னைக் கீழே தள்ளித் தீங்கு செய்யக்கூடியதாகிய இழிவு மர வண்டியிலே ஏன் விருப்பம் கொள்கிறாய்?" என்றது. உடனே ஞானமாகிய ரதத்தைக் கொண்டு தயார் செய்து வைக்கும்படி எனது சேவகனாகிய "சங்கற்ப" னிடம் கட்டளையிட்டேன். ரதம் வந்து நின்றது. அதில் ஏறிக்கொண்டேன். ஆனால் எனது ஞானரதம் மற்றவர்களுடையதைப்போல் அத்தனை தீவிரம் உடையதன்று. எளிதாக நெடுந்தூரங் கொண்டு போகத் தக்கதும் அன்று. கொஞ்சம் நொண்டி. என்ன செய்யலாம்? இருப்பதை வைத்துக்கொண்டு தானே காரியங் கழிக்கவேண்டும்? ஆகவே, அந்த ரதத்தின் மீது ஏறிக்கொண்டேன். அதிலேறி நான் கண்டு வந்த காட்சிகளும் அவற்றின் அற்புதங்களுமே இந்தப் புஸ்தகத்தில் எழுதப்படுகின்றன.