பக்கம் எண் :

அந்தரடிச்சான் சாஹிப் கதை

மொகலாய ராஜ்யத்தின்போது, தில்லி நகரத்தில் அந்தரடிச்சான் சாஹிப் என்ற ஒரு ரத்ன வியாபாரி இருந்தான். அவனுக்குப் பிதா பத்து லக்ஷம் ரூபாய் மதிக்கத் தகுந்த பூஸ்தியும் பணமும் நகைகளும் வைத்துவிட்டுப் போனார். இவன் அவற்றை யெல்லாம் பால்யத்தில் சூதாடித் தோற்று விட்டான் அந்தரடிச்சான் சாஹிப்புக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அவனுக்குச் செத்தான் சாஹிப் என்று பெயர்.