"சரி? என்று மானி அய்யன் வெளியிற் போனான். "இங்கே வருக ஐயரே" என்று மாணிக்கஞ் செட்டி திரும்பவும் அவனைக் கூப்பிட்டான். சிறுவன் திரும்பி வந்தான். "ஐயரே! நீர் முந்திச் சித்திரை வீதியில் முருகச் செட்டியார் கடையில் இருக்கவில்லையா?" என்று செட்டி கேட்டான். மானி - "ஆம்" என்றான். செட்டி- "அங்கிருந்து ஏன் வெளியேறி விட்டீர்?" மானி - "எனக்கும் முருகச் செட்டியாருக்கும் குணம் ஒத்து வரவில்லை." செட்டி- "அதென்ன விஷயம் காணும்?" மானி - "நம்முடைய குணம் அவருக்குப் பிடிக்கவில்லை. அவருடைய குணம் எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவு தான்." செட்டி - "அதுதான் என்ன விஷயம்?" என்று கேட்டேன். மானி - "அதை இவ்விடத்தில் விளங்கச் சொல்வதில் பிரயோஜனம் இல்லை." செட்டி - "ஏன்? குற்றம் உம்முடையதுதானோ?" மானி - "என்மேல் ஒரு குற்றமும் இல்லை. ஒருநாள் என்னைக் கடையில் வைத்துவிட்டு வெளியே போனார். அவருடைய மகனும் அன்று கடைக்கு வரவில்லை. கடையில் என்னைத் தவிர வேறு யாருமே கிடையாது. இப்படியிருக்கையில், சங்குத் தேவன் என்ற மறவன் வந்து, "செட்டியார் எங்கள் வீட்டிலேயிருக்கிறார். |