பக்கம் எண் :

மாணிக்கஞ் செட்டி மானி அய்யனை நகைத்தது

"ஐயரே, என்ன வேண்டும்?" என்று செட்டி கேட்டான்.

"தங்களுடைய கடையிலே எனக்கொரு வேலை போட்டுக் கொடுக்க வேண்டும்" என்று சிறுவன் சொன்னான்.

"உனக்கென்ன தெரியும்?"

"எனக்கு எண்சுவடி முழுதும் நான்றாகத் தெரியும். கணக்குப் பதிவு தெரியும். கூடிய வரை எழுதப் படிக்கத் தெரியும்.?

இதைக் கேட்டவுடனே செட்டி நகைத்தான்.

"பார்ப்பாரப் பிள்ளைகள் வந்தால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாதென்று சொல்லும் வழக்கமே கிடையாது. எதுவும் தெரியும். ஐயரே, போய் வாரும். இவ்வளவு தெரிந்த பிள்ளைகள் நம்மிடம் வேலைக்கு வேண்டாம்? என்று சொன்னான்.