பக்கம் எண் :

சமூகம் - நாற்குலம்

இவ்வாறு திலகர் சொல்லியதிலிருந்து நமது தேசத்திற்கு மிகுந்த நன்மை உண்டாகக் கூடும். ஏனென்றால்,இவர் தேசம் முழுவதிலும் சுதேசியக் கட்சியாருக்குத் தலைவராக இருப்பது மாத்திரமேயன்றி, மஹாராஷ்டிரத்து வைதீகப்பிராமணர்களின் தலைவராகவும் விளங்குகிறார். வேத சாஸ்திரஆராய்ச்சியில் உயர்ந்த கீர்த்தி பெற்றவர். நெடுங்காலமாக இடைவிடாது செய்துவரும் ஆராய்ச்சியினாலும், உயர்ந்த மேதையினாலும் நமது பூர்வீகமான ஜாதி தர்மத்தின் உட்கருத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு நமது தற்காலப்"பிரிவுகளைக் கண்டிக்கிறார். புராதன தர்மமே பின்பற்றத்தக்கது. ஹிந்துக்களாகிய நாமெல்லோரும் இவருடைய உபதேசப்படி நடந்தால் நன்மையுண்டாகும். இப்போதுள்ளஜாதி விரோதங்களும் தாழ்வுகளும் நீங்கி எல்லோருக்கும்மேன்மை யுண்டாகும்.

ஏனென்றால், எல்லாச் செய்கையும் ஈசனுடையசெய்கை, சோம்பர் ஒன்றுதான் இழிவு; அதுதான் சண்டாளத்தனம். எந்தத் தொழிலையும் நேரே செய்வோர் மேன்மக்கள்.

ஒருவன் தான் பிராமணனாக வேண்டும் என்றுகருதினால் அவன் உண்மை ஆராய்ச்சியே முதற்காரியமாகக்கொண்டு வாழக்கடவான். க்ஷத்திரிய பதவி வேண்டுமானால்,தன்னுயிர்க்கிரங்காமல் மன்னுயிரைக் காப்பதே விரதமாகக்கொண்டு வாழக்கடவான். இங்ஙனமே மற்றவையும் கொள்ளுக.குணத்தாலும் தொழிலாலும் ஏற்படுகிற மேன்மையைக் கண்டுயாரும் பழிகூற இடமில்லை. குணத்திலும் தொழிலிலும் கடைப்பட்ட ஒருவன் பிறப்பைக் காரணமாக வைத்துக்கொண்டு "நான் மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவன்""என்று சொல்லும்போது, மற்றவருக்குக் கோபம் உண்டாகிறது.

"செய்ற்கரிய செய்வார் பெரியர் சிறியர்       செயற்கரிய செய்கலா தார்"

என்று, தாம் வள்ளுவர் மரபில் பிறந்தாலும் நமதுமுன்னோரால் பிரமதேவனுடைய அவதாரமென்று போற்றப்பட்டதிருவள்ளுவ நாயனார் சொல்லுகிறார். ஒருவன் குண கர்மங்களால் பிராமணனாக இருப்பானாகில் அவனுக்கு நாட்டில்முதலாவது மதிப்புண்டாதல் பொதுவாக எல்லாத் தேசங்களிலும்இயற்கையாக நடந்து வரும் நெறி. ஏனென்றால் எல்லாத் தொழில்களுக்கும் சாஸ்திரமே நேத்திரம். சரீர இன்பங்களைத்தேடுவதே முதற்காரியமாகக் கொண்ட மனிதர் மிகுந்து போயிருக்கும் இவ்வுலகத்தில், சிலர் அந்தப் படியைக் கடந்து மேல்ஏறிப்போய் உண்மை தேடுவதே முதற் காரியமென்றும்,மற்றதெல்லாம் அதற்குப் பிறகு தான் என்றும் உணர்ந்துநடப்பாராயின், அவரே தலைமக்கள். மற்ற வருணத்துநெறிகளையும் இப்படியே வகுத்தறிந்து கொள்ளுதல் எளிது.