க்ஷமை பொதுவாக அநேகரிடத்தில் ஒரு துர்க்குணமிருக்கிறது.தான் ஒரு குற்றஞ்செய்தால், அதைச் சுண்டைக்காய் போலவும், அதே குற்றத்தை மற்றவன் செய்தால், அதைப் பூசனிக்காய் போலவும் நினைக்கிறார்கள். மாமியார் உடைத்தால் மண்கலம்; மருமகள் உடைத்தால் வெண்கலம். மனிதனுக்கு, உண்மையாகவே புத்தித் தெளிவும் யோக்யதையும் தொடங்கும்போது, பிறர் குற்றங்களை க்ஷமிக்கவேண்டுமென்ற எண்ணமுண்டாகிறது.மூடன் தான் செய்த குற்றத்தை மறந்துவிடுகிறான்; அல்லதுபிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான்; அல்லது, பொய்க் காரணங்கள் சொல்லி அது குற்றமில்லை என்று ருஜூப்படுத்தமுயற்சி செய்கிறான். குற்றத்திற்குக் காரணம் அறியாமை; அதைநீக்கும் வழி ஸத்ஸங்கமும் தைர்யமும். பிறர் "குற்றங்களைக்ஷமிக்கும் குணம் குற்றமில்லாதவர்களிடத்திலே தான் காணப்படும். குற்றம் செய்வோர் பரஸ்பரம் மிகுந்த எரிச்சலோடிருப்பார்கள். ஒரு தொழிலைச் சேர்ந்தவர்களுக்குள்ளே பொறாமையுண்டாவது ஸஹஜந்தானே! நீதி நீதி என்பது பொது ஒழுக்கம். ஒரு கிராமத்தில்வலியவனுக்கு வேறு நியாயம்; எளியவனுக்கு வேறு நியாயமாகஇருந்தால், அங்குள்ள நீதிக்காரரை உடனே மாற்ற வேண்டும்.இல்லாவிட்டால், கிராமம் விரைவில் அழிந்துவிடும். ஜனங்கள்குற்றஞ்செய்யாமல் நீதிக்காரர் பார்த்துக்கொள்ள வேண்டும்.நீதிக்காரர் குற்றஞ் செய்யாமல் ஜனங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். நீதிக்கா ரரிலே இரண்டு பெரிய பிரிவு உண்டு;நியாயஸ்தலங்களிலிருந்து நீதியைப் பரிபாலனம் செய்வோர்ஒரு பகுதி; நீதி (சட்ட) சபைகளிலிருந்து விதிகள் ஏற்படுத்துவோர் மற்றொரு பகுதி; இவ்விரு திறத்தாரும் கோணல்வழியிலே இறங்காமல் அடக்க வேண்டிய பொறுப்பு பொதுஜனங்களைச் சேர்ந்தது. வாக்குச் சீட்டு பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா - அநேகதேசங்களில் சட்டங்கள் செய்யும் ஸபைக்கு "ஜனஸபை" என்றுபெயரிட்டு ஸபைக்காரர் (மெம்பர்) ஒவ்வொருவரையும் பொதுஜனங்கள் வாக்குச் சீட்டுப் போட்டு நியமனம் செய்யும் வழக்கம் பலவாறாக நடை பெற்று வருகிறது. ஜனஸபையார் நியாயமில்லாத சட்டங்கள் செய்தால், அடுத்த தடவை ஜனங்கள் தம்மைத் தள்ளி விடுவார்கள் என்ற பயம் இருக்கவேண்டும். ஜனங்களுடைய அதிகாரத்திற்குட்படாத சட்ட ஸபையார் மனம்போனபடியெல்லாம் சட்டம் போடுவார்கள். அதிலே பல விபரீதங்கள் ஏற்படும். வாக்குச்சீட்டு (வோட்) விஷயத்தில் பலவித அனுஷ்டானங்கள் இருக்கின்றன. இங்கிலாந்திலேவாக்குச் சீட்டுப்போடும் உரிமை சிலருக்கில்லை. பிரான்ஸ்தேசத்திலே எல்லாரும் சீட்டுப்போடலாம். அமெரிக்காவிலேபல ஜில்லாக்களிலே பெண்கள் ஜனஸபைக்குச் சீட்டுப் போடுகிறார்கள். இந்த முறையை தேசமுழுமைக்கும் பொதுவாக்கி, ராஜ்யத்தில் ஆணையும் பெண்ணையும் நிகராக்கி விடவேண்டும் என்று அந்த நாட்டிலே மிஸ்டர் ஹியூஸ், மிஸ்டர் வில்ஸன் போன்ற பெரிய செல்வாக்கு உடைய தந்திரிகள் விரும்புகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் அமெரிக்காவில் எல்லா நாடுகளிலும் பெண் சீட்டு வழக்கமாய் விடும்என்று தோன்றுகிறது. வாக்குச் சீட்டே புருஷலக்ஷணமென்றுமேற்கு தேசத்தார் சொல்லிக்கொண்டு வந்தார்கள். இப்போதுபெண்ணுக்குக்கூட அந்த உரிமை இல்லாவிட்டால் இழிவுஎன்று தீர்மானம் செய்து வருகிறார்கள். |