பக்கம் எண் :

உண்மை - நம்பிக்கை

மயிலாப்பூரில் ஸ்ரீ கலவல கண்ணன் செட்டியார்ஏற்படுத்திய புதிய ஸம்ஸ்க்ருத கலாசாலையின் க்ருஹப் பிரவேசத்தை ஒட்டி நீதிப்ரவீண ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர்செய்த ஆசி வசனங்களிடையே, ராமானுஜா சார்யருடையமகிமையைப்பற்றிச் சில வார்த்தைகள் சொன்னார். ஸ்ரீமான்நீதிமணி அய்யர் பிரம்மவேதாந்தியாகையால் இவருக்குத்துவைதம், விசிஷ்டாத்து வைதம், அத்வைதம், என்ற மூன்றுகட்சியும் ஸம்மதம். ஸத்யம் ஒன்று; அதனை ஆராதனைசெய்யும் வழிகள் பல; அத்வைத ஸ்தாபனம் செய்தசங்கராச்சார்யரே ஷண்மத ஸ்தாபனமும் செய்ததாகஅவருடைய சரித்திரம் சொல்லுகிறது.

பக்தியின் பெருமையை உலகத்துக்கு விளங்கக்காட்டிய மஹான்களிலே ராமானுஜாசாரியார் ஒருவர்; பக்தியாவதுதெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும்,பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்தபொருளைக் கண்"நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும்தெய்வத்தை நம்பவேண்டும். இரவிலும் பகலிலும், இன்பத்திலும்துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம்தெய்வ அருளைப்பற்றி நினைக்க வேண்டும்.நோய் வந்தால், அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணியவேண்டும். செல்வம் வேண்டுமானால், தெய்வத்தினிடம் கேட்கவேண்டும். கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லாமங்களங்களையும் தெய்வத்தினிடம் உண்மையுடன் கேட்டால்அது கொடுக்கும். தெய்வம் கொடுக்காவிட்டாலும் அதை நம்பவேண்டும். கேட்டவுடனே கொடுப்பது தெய்வத்திற்கு வழக்கமில்லை. பக்தி பக்குவமடைந்த பிறகுதான் கேட்ட வரம்உடனே கிடைக்கும். அதுவரை தாமஸங்கள் உண்டாகும். இதுகர்ம விதி. ''அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்தகருமங்கள் ஆகா''. எனவே,நாம் தெய்வத்தினிடம் கேட்ட பயன்கைகூடுவதற்கு எத்தனை காலமான போதிலும், அதைரியப்படாமல்,தெய்வபக்தியையும் அதனாலுண்டாகும் ஊக்கத்தையும்முயற்சியையும் துணையாகக் கொண்டு நடக்கவேண்டும். விதியின்முடிவுகளைத் தெய்வபக்தி வெல்லும். இந்த உலகம் முழுமைக்கும்ஈசனே தலைவன். அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன்எது கேட்டாலும் கைகூடும். நம்பு; கேள். ஓயாமல் தொழில் செய்துகொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே. தெய்வம் நிச்சயமாக வரம்கொடுக்கும். தெய்வம் பிரஹ்லாதனை ஹிரண்யனிடமிருந்து காத்தது."முதலை வாயிலிருந்து யானையை விடுவித்தது. பாஞ்சாலியின்மானத்தைக்காத்தது. தெய்வம் விக்கிரமாதித்யனுக்கும்,காளிதாஸனுக்கும், சிவாஜி ராஜாவுக்கும், நிகரில்லாத வெற்றியும் தீராதபுகழும் கொடுத்தது. இவ்விதமான தெய்வ பக்தியை ராமாநுஜர் மனிதருடைய இஹபரவாழ்வுக்கு முதல் ஸ்தானமாகச் சொன்னார்.ஆழ்வார்களுடைய பாட்டில் விடுதலை யொளி நிற்பதுகண்டு,அவற்றை வேதம் போல் கருதவேண்டுமென்று போதனை செய்தார்.