பக்கம் எண் :

உண்மை - நம்பிக்கை

ஆழ்வார்களுடைய குலம் நானாவிதம்;அப்படியிருந்தும் அவர்களைக் கோயிலில் வைத்துப் பூஜைசெய்யலாமென்று ராமாநுஜர் நியமித்தார். முற்காலத்தில்பிராமணர் இதர ஜாதியாரை இழிவாக வைத்துக் கெடுத்தார்களென்றும், ஞானத்துக்குத் தகாதவரென்று சொல்லி அடிமைப்படுத்தினார்களென்றும் பொய்க்கதைகள் சொல்லி ஹிந்துதர்மத்தை அழிக்க விரும்புகிற கிறிஸ்துவப் பாதிரிகளும்அவ்விடத்து, சிஷ்யர்களும் ராமாநுஜாசாரியர் பிராமணர்என்பதை அறிய மாட்டார் போலும். சூத்திரராகிய திருக்கச்சிநம்பியை ராமாநுஜர் குருவாகக்கொண்டு அவருடையஉச்சிஷ்டத்தை உண்ணத் திருவுளங் கொண்டார். திருநாராயணபுரத்தில் பறையர் ஒருசமயம் கோயிலுக்குள் வரலாமென்றுஸ்ரீராமாநுஜர் நியமித்தருளிய முறை இன்றைக்கும் நடந்துவருகிறது.

இப்படிப்பட்ட மனுஷ்யர்களுடைய தர்மத்தைஇக்காலத்தில் வளரும்படி செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன்ஸ்ரீ கண்ணன் செட்டியார் ஏற்படுத்தியிருக்கும் கலாசாலையில்,பிற மதங்களும் உண்மையென்ற சமரஸ ஞானத்தை ஊட்டத்தவறலாகாது. இந்த ஸமரஸ ஞானம் இல்லாவிட்டால் எந்தச்சித்தாந்தமும் நாளடைவில் பொய்யாகவும், குருட்டுநம்பிக்கையாகவும், வீண் அலங்காரமாகவும் முடிந்து ஜனங்களை "மிருகங்களைப் போலாக்கிவிடும். வேத தர்மம் ஒன்று. அதில்ராமாநுஜர் தர்மம் ஒரு கிளை. பாஷ்ய விசாரணை நல்லது.உண்மையான பக்தியே அமிர்தம். எல்லா உயிர்களிடத்திலும்நாராயணன் விளங்குவது கண்டு, அந்த ஞானத்தாலே கலியைவென்று தர்ம ஸ்தாபனம் செய்வதற்குள்ள பயிற்சி மேற்படிகண்ணன் செட்டியார் கலாசாலையிலும், அதுபோன்று எல்லாப் பாடசாலைகளிலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், தேசம்மறுபடி மேன்மையடையும். இது கைகூடும் வண்ணம் பராசக்திஅருள் செய்க.