(வினை) = 1. மனம் பொருந்து. 2. நட்புச் செய். இணங்கு - இணங்கல் = உடன்பாடு. 2. இரண்டு. இணங்கற் பிஞ்சு (உ.வ.) இணங்கன் = நண்பன். “வணங்குவோ ரிணங்கன் வந்தான்” (திருவாலவா. 28 : 27) இணங்கி = தோழி. (பிங்.) இணங்கர் = ஒப்பு. “கற்பிற் கிணங்க ரின்மையான்” (கம்பரா. மீட்சி. 147) இணங்கலர் = பகைவர். இணங்கார் = பகைவர். இணங்கு (செ. குன்றியவி.) - இணக்கு (செ. குன்றாவி.) = இசைவி. (பெ.) = 1. இசைவு. “இணக்குறுமென் னேழைமைதான்” (தாயு. பராபர. 273). 2. ஒப்பு. “இணக்கி லாததோ ரின்பமே” (திருவாச. 30 1). இணக்குப் பார்வை = பார்வை விலங்கு. இணக்கு - இணக்கம் = 1. இசைப்பு. 2. பொருத்தம். 3. நட்பு. “நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்” (கொன்றைவே.). 4. உடன்பாடு. 5. திருத்தம். இணக்கோலை = உடன்படிக்கை முறி. இணாப்புதல் = ஏய்த்தல் (யாழ்). இணாப்பு = ஏய்ப்பு (யாழ்). ஏய்த்தலாவது பொருந்தச் சொல்லி ஏமாற்றுதல். இணைதல். (செ. குன்றியவி.) = 1. சேர்தல். “இணைந்துடன் வருவதிணைக்கை” (சிலப். 3 18, உரை). 2. உடன்படுதல். 3. ஒத்தல் (தணிகைப்பு. நாட்டு. 53). இணைத்தல் (செ. குன்றாவி.) = 1. சேர்த்தல். 2. கட்டுதல். “இணைத்த கோதை” (திருமுருகு. 200). இணை = 1. சேர்வு. 2. ஒப்பு. 3. இரண்டு. 4. இரட்டை. “குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில்” (தொல். 1261). 5. துணை. 6. உதவி. இணைப்பு = 1. இசைப்பு. 2. ஒப்பு. “”இணைப்பரும் பெருமை” (திருவாச. 3 46). |