75 573). 3. ஒத்தல். “கூற்றிசைக்கு மென” (பாரத. இராச. 52). 4. மிகக் கொடுத்தல் (பிங்.). இசைவு = 1. பொருந்துகை. “இசைவில வெல்லாம்” (பெருங். மகத. 15 க 9). 2. தகுதி. 3. உடன்பாடு. “மறையோ ரிசைவினால்” (பெரியபு. சண்டேசுர. 24). 4. ஏற்றது. இசைவுகேடு = 1. பொருத்தமின்மை. 2. கருமத் தவறு. இசைகுடிமானம் = நாட்டுக்கோட்டைச் செட்டியாரால் எழுதப் பெறும் திருமண ஒப்பந்தம். இசையோலை = ஒப்பந்த வோலை. இயை - (எய்) - ஏய். ஏய்தல் (செ. குன்றியவி.) = 1. பொருந்துதல். “ஏய்ந்த பேழ்வாய்” (திவ். பெரியதி. 1 7 3). 2. தகுதல். “தில்லையூரனுக்கின் றேயாப்பழி” (திருக்கோ. 374). (செ. குன்றாவி.) = 1. ஒத்தல். “சேலேய் கண்ணியரும்” (திவ். திருவாய். 5 1 8) 2. எதிர்ப்படுதல். “ஏயினா ரின்றி யினிது” (ஐந். ஐம். 11). ஏய்த்தல் (செ. குன்றா வி.) = 1. பொருந்தச் சொல்லுதல். “பொய்குறளை யேய்ப்பார்” (பழ. 77). 2. ஒத்தல். “அல்லிப்பாவை யாடுவனப் பேய்ப்ப” (புறம். 33 17) 3. ஏமாற்றுதல். ஏய = ஓர் உவமவுருபு. (தண்டி. 33) ஏய்ப்ப = ஓர் உவமவுருபு. (தொல். பொருள் 290) ஏய்வு = உவமை (திவா). (திவா.) ஏயான் = ஒரு தொழிலைச் செய்தற்குத் தகாதவன். “மாவலியை யேயா னிரப்ப” (திவ். பெரியதி. 1 5 6) ஏய் - ஏ = உம்மைச் சொற்போல் எண்ணுப்பொருளில் வரும் ஓர் இடைச்சொல். எ - டு : இரண்டேகால் - (எண்ணல்) கழஞ்சே குன்றி - (எடுத்தல்) கலனே பதக்கு - (முகத்தல்) முழமே விரல் - (நீட்டல்) |