பக்கம் எண் :

27

75 573). 3. ஒத்தல். “கூற்றிசைக்கு மென” (பாரத. இராச. 52). 4. மிகக் கொடுத்தல் (பிங்.).

இசைவு = 1. பொருந்துகை. “இசைவில வெல்லாம்” (பெருங். மகத. 15 க 9). 2. தகுதி. 3. உடன்பாடு. “மறையோ ரிசைவினால்” (பெரியபு. சண்டேசுர. 24). 4. ஏற்றது.

இசைவுகேடு = 1. பொருத்தமின்மை. 2. கருமத் தவறு.

இசைகுடிமானம் = நாட்டுக்கோட்டைச் செட்டியாரால் எழுதப் பெறும் திருமண ஒப்பந்தம்.

இசையோலை = ஒப்பந்த வோலை.

இயை - (எய்) - ஏய்.

ஏய்தல் (செ. குன்றியவி.) = 1. பொருந்துதல். “ஏய்ந்த பேழ்வாய்” (திவ். பெரியதி. 1 7 3). 2. தகுதல். “தில்லையூரனுக்கின் றேயாப்பழி” (திருக்கோ. 374).

(செ. குன்றாவி.) = 1. ஒத்தல். “சேலேய் கண்ணியரும்” (திவ். திருவாய். 5 1 8) 2. எதிர்ப்படுதல். “ஏயினா ரின்றி யினிது” (ஐந். ஐம். 11).

ஏய்த்தல் (செ. குன்றா வி.) = 1. பொருந்தச் சொல்லுதல். “பொய்குறளை யேய்ப்பார்” (பழ. 77). 2. ஒத்தல். “அல்லிப்பாவை யாடுவனப் பேய்ப்ப” (புறம். 33 17) 3. ஏமாற்றுதல்.

ஏய = ஓர் உவமவுருபு.    (தண்டி. 33)

ஏய்ப்ப = ஓர் உவமவுருபு.    (தொல். பொருள் 290)

ஏய்வு = உவமை (திவா).    (திவா.)

ஏயான் = ஒரு தொழிலைச் செய்தற்குத் தகாதவன்.

“மாவலியை யேயா னிரப்ப”     (திவ். பெரியதி. 1 5 6)

ஏய் - ஏ = உம்மைச் சொற்போல் எண்ணுப்பொருளில் வரும் ஓர் இடைச்சொல்.

எ - டு : இரண்டேகால் - (எண்ணல்)

   கழஞ்சே குன்றி - (எடுத்தல்)

   கலனே பதக்கு - (முகத்தல்)

   முழமே விரல் - (நீட்டல்)