என்னத்தான் = எக்குலத்தான் (வடார்க்காட்டு வழக்கு) என்னர் = யாவர். “அருந்தொடைச் சித்திரமதனை யென்னரே யளந்தறிபவர்” (இரகு. திக்கு. 196) என்னரும் = எதும், சிறிதும், எவ்வளவும். “என்னருங் கருதான்” (பெருங். நரவாண. 2 41) என்னோரும் = 1. எத்தன்மையோரும். 2. எல்லாரும். “என்னோரு மறிய எடுத்துரைத்தன்று” (பு.வெ. 9 6, கொளு). என்னது - எந்து = 1. என்ன. “அதெந்துவே” (திருவாச. 29). Te., M. endu. 2. எவ்வாறு. “செயலாம் வழிமற் றெந்தோ” (தணிகைப்பு. பிரம. 4). M. endu, K. entu. இனி, எது - எத்து - எந்து என்றுமாம். என்னது - எற்று (என் + து - ) எற்றுக்கு. என்ன. ம. enna என்ன - என்னவோ - என்னமோ. என்று = எப்போது. M. enru, K. endu. என்றூழி = என்றைக்கும். என் - எனை = என்ன, எந்த, எத்தகைய. எனைத்து = எவ்வளவு. எனையவன் - எனையன், எனைவன் = யாவன். “எனைவ ராயினு” (பெருங். வத்தவ. 3 22) தன்மைப் பெயரடியும் வினாச்சொல்லடியுமான ஏயிரண்டும், உயர்வும் எழுச்சியும் குறித்த ஏ யென்னும் உரிச்சொல்லினின்று தோன்றியிருக்கலாம். “ஏபெற் றாகும்” (தொல். 788) குறிப்பு: தன்மைப் பெயரின் ஏகாரவடி அண்மைச் சுட்டான ஈகாரத்தின் திரிபாகவும், வினாச்சொல்லின் ஏகாரவடி எழுச்சி குறித்த ஏகாரமாகவும் இருக்கலாம். |