பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

தமிழ் அல்லது தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டமே என்பதற்குக் காரணங்கள்

(1)தமிழ் தொன்றுதொட்டுத் தென்னாட்டில் வழங்கிவரல்.
(2)தமிழ்நாட்டில் தெற்கே செல்லச் செல்லத் தமிழ் தூய்மையாகவும், வடக்கே செல்லச் செல்ல அது திரிந்தும் இருத்தல்.
(3)தமிழ்நாட்டையடுத்து வடக்கும் மேற்கும் தமிழின் திரிபான திரவிடமொழிகள் வழங்கல்.
(4)இந்தியாவில், வடக்கே செல்லச் செல்லத் திரவிட மொழிகள் திரிதல்.
(5)வடஇந்தியாவில் திரவிட மொழிகளும் ஆரிய மொழிகளும் வழங்கல்.
(6)இந்தியாவிற்குப் புறம்பாகப் பெலுச்சித்தானத்திலன்றி வேறோரிடத்தும் திரவிட மொழி வழங்காமை.
(7)தமிழிலக்கிய மெல்லாம் தென்னாட்டிலேயே இயற்றப் பட்டிருத்தல்.
(8)வணிகத்தால் பிற நாடுகளினின்று வந்த கருப்பொருள் களன்றி, பண்டை யிலக்கியத்திற் கூறப்பட்டுள்ள முதல் கருவுரியாகிய மூவகைப் பொருள்களும், தென்னாட்டிற்கே யுரியவை யாயிருத்தல்.
(9)பழம் பாண்டிநாடு குமரிக்கண்டப் பகுதியாகக் கூறப்பட்டிருத்தல்.
(10)தமிழ் ஒலிமுறைமை தென்னாட்டிற்கன்றி வேறொரு நாட்டிற்கும் ஏலாமை.