குறிப்பொலிக் காண்டம் 1. உணர்வொலிப் படலம் மக்கள் தம் உள்ளத்துத் தோன்றும் உணர்வுகளை, தம்மையறியா மலே உடன் வெளிப்படுத்தும் வாயில் ஒலிகள், உணர்வொலிகளாம். எடுத்துக்காட்டு: உணர்வு | ஒலிகள் | மகிழ்ச்சி | ஆ, ஊ, ஏ, ஐ, ஆய், ஓ | நோவு | ஆ, ஈ, ஊ | வியப்பு | ஆ, ஆஆ (ஆவா) - ஆகா, ஏ, ஐ, ஓ | இழிவு | ஊ, பூ | இரக்கம் | ஆ, ஆஆ - ஆவா | தெளிவு | ஓ, ஓஓ - ஓவோ - ஓகோ |
இவை போல்வனவே பிறவும். இவ் வொலிகள், குரல் வேறுபாட்டாலும், மாத்திரை வேறு பாட்டாலும், அசையழுத்த (accent) வேறுபாட்டாலும், அலகுநிலை (pitch) வேறுபாட்டாலும், அவ்வவ் வமையத்திற்கேற்ப வெவ்வேறு உணர்வுகளை உணர்த்தும். சில உணர்வுகள் மெல்லிய சகரவொலியால் மட்டும் உணர்த்தப்படும். அவை என் என்னுந் துணைவினை சேர்த்துக் கூறப்பெறும். எ-டு: ஊசு ஊசெனல் (உறைத்தற் குறிப்பு) |