பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

2. ஒப்பொலிப் படலம்

இருதிணைப் பொருள்களும் இயற்கையாகவும் செயற்கையாகவும் பிறப்பிக்கும் ஒலிகளைப் போன்ற ஒலிக்குறிப்புகளும், அவற்றை அடியாகக்கொண்ட சொற்களும், ஒப்பொலிச் சொற்களாகும்.

எ-டு:

(1) உயர்திணை யொலிகள்

ஒலிக்குறிப்புசொல்
சப்(பு)சப்பு - சப்பிடு - சாப்பிடு - சாப்பீடு - சாப்பாடு
சவ(க்கு)சவை - சுவை, சுவண்டை
கறுகறி (கறித்தல் = மெல்லக் கடித்தல்)
கடுகடி
இக்(கு)விக்கு - விக்கல்
ஏவ்ஏப்பம்
இ இ, இசி இசி - சிரி
கெக்கக் கெக்ககெக்கரி
ஏங்கு (ஏங்குதல் = பெருமூச்சு விடுதல்)
துதுப்பு
கார்காறு
ஆவலி - அவலி - அவலம் (=அழுகை, துன்பம்)

ஒலிக்குறிப்புசொல்
குறட்டுகுறட்டை
துறட்டுதுறட்டை
சீசீழ்க்கை, சீத்தை
வீள்வீளை

(2) அஃறிணை யொலிகள்

(உயிரி யொலிகள்)

ஒலிக்குறிப்புசொல்
மாமாடு
காள்-காழ்2காழகம், கழுதை (தெ. காடிதெ)

2. கழுதைக்குக் காதில் உபதேசம் பண்ணினாலும் ‘காழ் காழ்’ என்கிறதை விடாது என்பது பழமொழி.