பக்கம் எண் :

15


ஞள் ஞள்ளை - ஞெள்ளை, ஞாளி - நாளி = நாய்
குர்குரங்கு
கீர்கீரி
சரசர (என்று நகர்வது)சாரை
காகாகாக்கா - காக்கை, காகம்
கூகுயில்
கூம்கூகை
சிள் சிள்
உர் உரறு
உர் உறுமு
ஊள் ஊளை
கும் குமுறு - குமுறி (ஒருவகைப் புறா)
கே கேர் - கேரு (கேருதல் = கோழி முட்டையிடக் கத்துதல்)கொக்கக் கொக்க கொக்கரி
இம் இமிர் - ஞிமிறு - மிஞிறு, இமிழ்
சீத்(து) சீறு - சீற்றம் (உயிரிலியொலிகள்)
சல்சல் சலங்கை - சதங்கை, சிலங்கை
கிலுகிலு கிலுகிலுப்பை
கிண்கிண்கிண்கிணி
உர் உரும் - உருமு (இடி)
விண் (யாழ் நரம்பொலி)வீணை

வில்நாணைத் தெறிக்கும்போது எழுமொலியை விண் என்றொலிக்கிறது என்பதையும், வில்லினின்று வில்யாழும் வில்யாழி னின்று வீணையாழும் பிறந்திருத்தலையும், புண்பட்ட நிலையில் உடல் நரம்பு துடிப்பதை விண் விண்ணென்று தெறிக்கிறது என்பதையும், ஓர்ந்துணர்க.

(உறுமி, கஞ்சுரா (கிஞ்சிரி), கிறி, குடுகுடுப்பை (குடுகுடுக்கை), சல்லரி, சல்லிகை, சாலர், சிங்கி, தகுணிச்சம், தம்புர், பறை, மதங்கம் (மிருதங்கம்), முதலிய இசைக்கருவிப் பெயர்களும்; அகவு கனை குரை பிளிறு முதலிய கத்து வினைச்சொற்களும்; ஒலிக்குறிப்பையடியாகக் கொண்டு பிறந்தவையே.