பக்கம் எண் :

35


எ-டு:முதன் மிகை:உந்து - நுந்து
இடை மிகை:இலகு - இலங்கு
கடை மிகை:முன்- முன்பு

இனத்திரிபு என்பது உயிரினத் திரிபு, மெய்யினத் திரிபு என்னும் இருவகை இனவாரித் திரிபாகும். அவற்றுள் மெய்யினத் திரிபு, வல்லினத் திரிபு மெல்லினத் திரிபு முதலிய நால்வகைப்படும்.

எ-டு:உயிரினத் திரிபு:பரு - பெரு, வாயில் - வாயல்
மெய்யினத் திரிபு:சலங்கை-சதங்கை, தொழுதி - தொகுதி
வல்லினத் திரிபு:பொற்றை-பொச்சை, அத்தன் - அச்சன்
மெல்லினத் திரிபு; கழங்கு - கழஞ்சு
இடையினத் திரிபு:பிள்- பிய்
ஒலியினத் திரிபு:ஒளிர்-ஒளிறு

இத் திரிபுகள் இரண்டும் பலவும் சேர்ந்தும் வரும்.

எ-டு: மலங்கு - விலங்கு (விலாங்கு) இலந்தை - இரத்தி

மோனைத்திரிபு என்பது மோனையாகத் திரிந்து செல்வது. அது ஒருமடி திரிவதும், பலமடி திரிவதும் என இருதிறப்படும்.

எ-டு:கிண்டு - கெண்டுஒருமடி மோனை
நீள் - நெடு
தம் - தீம் - தித்தி பலமடி மோனை
குள் (குடம்) - கூள் - கொடு - கோடு

கூள் = வளைவு. வளைந்த வாழைப்பழ வகை கூளிவாழை யெனப்படுதல் காண்க. கோடு = வளைவு.

உயிரெழுத்துகளில் எதுவும் எதுவாகவேனும் திரியலாமேனும், உ-அ, உ-இ, என்னுந் திரிபுகள் பெருவழக்கானவும் மொழி வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்பவும் முதன்மையாய்க் கவனிக்க வேண்டியவுமாகும்.

எ-டு:உ-அஉ-இ
உகை - அகைதுற்றி - திற்றி
குள் - களபுணை - பிணை
குடும்பு - கடும்பு புட்டம் - பிட்டம
குட்டை - கட்டைபுய் - பிய்
குலை - கலைபுரள் - பிறழ்
குறுவாய் - கதுவாய்புரண்டை - பிரண்டை