பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்


துக்குணி - தக்குணிபுழுக்கை - பிழுக்கை
துளிர் - தளிர்முடுக்கு - மிடுக்கு
துணை - தனைமுண்டு - மிண்டு
முடங்கு - மடங்குமுல்லு - மில்லு
முறி - மறிமுழுங்கு - விழுங்கு
முடி - மடிமுளகு - மிளகு

குறிலுக்குச் சொன்னது நெடிலுக்கும் ஒக்குமாதலின், மேற்கூறிய திரிபுகளை முறையே ஊ - ஆ, ஊ - ஈ என்றுங் கொள்ளல் வேண்டும்.

எ-டு:ஊ - ஆஊ - ஈ
மூட்டு - மாட்டுதூண்டு - தீண்டு
(தூண்டா விளக்கு = தீண்டா விளக்கு)
நூறு - நீறு
பூறு - பீறு
நூன் - நீன்
பூளை - பீளை
பூட்டை - பீட்டை

மெய்யினத் திரிபுகளுள், ள்-ய் சிறப்பாகக் கவனித்தற்குரியது. பல ளகர மெய்யீற்றுச்சொற்கள் யகர மெய்யீற்றுச் சொற்களாகத் திரி கின்றன.

எ-டு:கொள் - கொய்
தொள் - தொய்
பிள் - பிய்
மாள் - மாய்

ஐகார ஒளகார உயிர்ப்புணரொலிகள் (vowel diphthongs) தோன்றியபின், தனி அகரக்குறிலை யடுத்த யகரமெய் அய் என்று எழுதப்படாமல் ஐ என்றே எழுதப்பட்டு வந்திருக்கின்றது.

“அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”             (மொழிமரபு. 23)

என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க.

எ-டு:அள் = கூர்மை. அள் - (அய்) - ஐ = நுண்மை.
நொள் - நள் - (நய்) - நை.
நொள்ளுதல் = தளர்தல். நொள் - நொள்கு. நைதல் = தளர்தல்.
பொள் - பொய் - (பய்) - பை.
பொய் = உட்டுளையுள்ளது.
வள் - (வய்) வை = கூர்மை.