பக்கம் எண் :

37

அன் என்பது அய் என்று திரிந்தபின் உயிரேறின் ஐகாரமாக எழுதப்படுவதில்லை.

எ-டு:(அய்) - அயில் = கூர்மை
பள் - (பய்) - பயம் = பள்ளம்
(வய்) - வயிர் = கூர்மை

இத்தகைய திரிபுகள் தமிழில் நிரம்ப வுள.

சில்லிடத்து உயிரினத் திரிபொடு மோனைத் திரிபு கலப்பது முண்டு. இம் முறையில், உ-அ என்பது ஒ-அ என்றாகும்; உ-இ என்பது உ-எ என்றாகும்; உ-எ என்பது மீண்டும் ஒ-எ என்றாகும். உ-ஒ, இ-எ என்பன மோனையாதல் காண்க.

எ-டு:

ஒ-அ  உ-எ  ஒ-எ
ஒழி-அழி உகள்-எகிர்சொருகு - செருகு
ஒடுங்கு - அடங்குகுழுமு - கெழுமுமொழுகு - மெழுகு
கொம்பு - கம்புதுளி - தெளி
தொள்ளாடு - தள்ளாடு
தொளத்தி - தளத்தி
பொலிசை - பலிசை
மொக்கை - மக்கை

கம்பைக் கொம்பு என்பது வடார்க்காட்டு வழக்கு. அதுவே முந்து வடிவாகும்.

குறிலுக்குச் சொன்னது நெடிலுக்கும் ஒக்கும்.

எ-டு:

ஓ-ஆஊ-ஏ ஓ-ஏ
கோல்-கால்ஊர்-ஏர் (எழுச்சி)தோண்டு - தேண்டு
நோடு - நாடுகூழ்வரகு - கேழ்வரகுநோடு - நேடு
(நோட்டம் - நாட்டம்) மோடு - மேடு
மோளம் - மேளம்

இங்குக் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுச் சொற்களுள், முழுங்கு முளகு மொழுகு மோளம் என்பன பார்த்த அல்லது கேட்டவளவில் கொச்சைபோலத் தோன்றும். ஆயின், அவையே மூலவடிவம் என்பதும், அவற்றின் இகர முதல் வடிவம் அவற்றின் திரிபே என்பதும் இந் நூன்முழுதும் நோக்குவார்க்கு விளங்கும்.