(2) தாயைக் குறிக்கும் சில சொற்கள் அன் ஈறு பெற்றும் வழங்குகின்றன. எ-டு: | அக்கை - அக்கன் | | அம்மை - அம்மன் |
இவற்றிலுள்ள ‘அன்’ ஈறு ஒருகால் மறங்குறிக்க வந்திருக்கலாம். (3) தாயைக் குறிக்கும் பல சொற்கள் முன்னொட்டுப் பெற்றும் பெறாதும் தமக்கையையும் குறிக்கின்றன. எ-டு: | தாய் | தமக்கை | | அக்கை | அக்கை | | | தமக்கை | | அச்சி | அச்சி | | அவ்வை | தவ்வை (தமவ்வை) |
தந்தை பெயரும் இங்ஙனம் தமையனைக் குறிக்கும். எ-டு: ஐயன் -தமையன். (4) குரவர் பெயர்கள் சில விகுதி மாறி அவர்களின் உடன் பிறந்தாரைக் குறிக்கின்றன. எ-டு: | அத்தன் - அத்தை (தந்தையோ டுடன்பிறந்தவள்) | | அம்மை - அம்மான் (தாயோ டுடன்பிறந்தவன்) |
(5) தந்தை தாய் பெயர் முன்னொட்டுப் பெற்றும் வரும். தம்+அப்பன் = தமப்பன் - தகப்பன். (தம்+ஆய் = தாய்) (6) குரவர் பெயர்களுட் சில பிறவற்றின் திரிபாகத் தெரிகின்றன. எ-டு: | அத்தன் - அச்சன் | | அம்மை - அவ்வை | | அன்னை - அஞ்ஞை |
(7) ஆண்பால் குறிக்கும் அன்னீறும் பெண்பால் குறிக்கும் இகர வைகார வீறுகளும், முதற்காலத்தில் குரவர் பெயர்களொடு சேர்ந்திருந்ததாகத் தெரியவில்லை. எ-டு: | அப்பன் - அப்பு | | அம்மை - அம்மு |
(8) குரவர் பெயர்கள் பாட்டன் பாட்டியரைக் குறித்தற்குப் பால் மயங்காது மீமிசையாக அடுக்கிவருவதுண்டு. |