பக்கம் எண் :

85

அண் - அண்ணம் = மேல்வாய்; அண் - அணல் = மேல்வாய்.

அண்ணல் = உயர்வு, உயர்ந்தோன், அரசன், கடவுள்.

அண்ணன் = பெரியோன், மூத்தோன், தமையன்.

அண்ணி = அண்ணன் மனைவி.

அண்ணாத்தல் = மேனோக்குதல்.

அணத்தல் = தலையெடுத்து நிமிர்தல்.

அணர்தல் = மேனோக்குதல். அணரி = மேல்வாய்.

அத்தாசம் = அந்தரம். அத்தாசமாய்த் தூக்கிக்கொண்டு போகிறான் என்பது தென்னாட்டு வழக்கு.

அந்தரம் = ஆகாயம், தேவருலகம்.

அந்தரக்கோல் = மேலிசை நரம்பு, மேலிசை.

அம்பரம் = மேலிடம், ஆகாயம், தேவருலகம்.

(உம்பரம் - அம்பரம்)

(குதி - கதி.) கதித்தல் = எழுதல்.

(13) குரவர் பெயர்

ஒருவனுக்கு உயர்ந்தோரான ஐங்குரவருள்ளும் இரு முதுகுரவர் மிகச் சிறந்தவராதலின், அவரைக் குறித்தற்கு உயர்வு குறித்த உகரச் சுட்டின் திரிபான அகரத்தை அடியாகக் கொண்ட பல சொற்கள் கிளைத்துள்ளன.

தந்தைதாய்

- - - - - -

அக்கை
அச்சன்அச்சி
அத்தன் அத்தி
அப்பன்அம்மை(அவ்வை)
- - - - - -அன்னி, அனி (அணி)
- - - - - -அன்னை (அஞ்ஞை), அனை
ஆஞன்
- - - - - -ஆத்தை
- - - - - -ஆய்

குறிப்பு:- (1) கோடிட்ட இடத்திற்குரிய சொற்கள் வழக்கற்றன போலும்.