பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(11) வினாச்சொல்

ஒருவனை எவன் என்று வினாவுவது, ஓர் இடத்திலுள்ள பல பொருள்களுள் ஒன்றை உயர எடுத்துக்காட்டி இதுவா என்று கேட்பது போலிருத்தலால், வினாச் சொல்லும் எழுச்சி அல்லது உயர்ச்சி குறித்த ஏகாரச் சொல்லடியாகப் பிறந்துள்ளது.

ஏ? = எது? எவை? எவன்? எவள்? எவர்? (முதல்நிலை).

ஏ - யா = எவை? (2ஆம் நிலை).

ஏ-ஏ (3ஆம் நிலை). ஏவூர்? (பண்டைத்தமிழ்); எவ்வூர்? (இற்றைத் தமிழ்). எவன் = எது? எவை? (4ஆம் நிலை). எவன் - என்.

ஏ-யா-ஆ. ஏவர் - யாவர் - யார் - ஆர்.

ஏ-ஆ-ஓ. வந்தானா? வந்தானோ? (5ஆம் நிலை).

பெயர்: ஏவன், ஏவள், ஏவர், ஏது, ஏவை.

எவன், எவள், எவர், எந்து, எது, என்னது, எவ், எவை, என்ன.

யாவன், யாவள், யாவர், யாது, யா, யாவை; யாவர் - யார், யாவது - யாது.

பெயரெச்சம்:      எ, எந்த, என்ன, எனை.

வினையெச்சம்:என்று(காலம்)
எங்கு, எவண், யாங்கு, யாண்டு(இடம்)
ஏன்(காரணம்)

ஏ எ யா என்னும் மூன்றே வினாவடிகளாய் அமைவதையும், ஆ ஓ என்னும் இரண்டும் ஈறாகவன்றி வேறாக வராமையையும், நோக்குக. எ ‘ஏ’யின் குறுக்கம்; யா அதன் திரிபு. ஆதலால் மூல வினாவடி ஏ என்னும் ஒன்றே.

(12) உயர்ச்சி குறிக்கும் அகர முதற் சொற்கள்

உ-அ-ஆ.

(உகைத்தல் = உயரவெழும்புதல். உகை - அகை.) அகைத்தல் = உயர்த்துதல்.

(உள் = மேன்மை. உள் - (உண்) - அண்.)

அண் = மேல், மேலிடம், மேல்வாய்.

அண்பல் = மேல்வாய்ப்பல்.