மால் - மார் - மாரி = காளி, முகில், மழை. மால் - மான் - மானம் - வானம் = முகில், மழை, விண். மான் - வான் = முகில், மழை, விண். மால் - மா = கருமை. முள் - மள் - மாள் - மாய் - மாயோன் (திருமால்), மாயோள் (காளி). மாய் - மாயம் = கருமை. மள் - (மய்) - மை = கருமை, முகில், காராடு, கரிய குழம்பு. மை - மயில் = கரு (நீல) நிறத் தோகையுள்ள பறவை. மயில் - மயிலை = கருமை கலந்த வெள்ளைக்காளை. மை - மயிர் = கரிய முடி. மை - மயி - மசி = கரிய குழம்பு. தஞ்சை நாட்டார், எழுதும் மையை மசி யென்றே கூறுவர். மசி - மசகு = வண்டி மை. மசகு - மசகம் = மயிர். மச்சு - மச்சம் = கரும்படர். மை - மஞ்சு = முகில். முள் - மள் = மண் - மணி = கரியது, நீலக்கல். மணிவண்ணன், மணிமிடற்றோன் முதலிய பெயர்களை நோக்குக. மள் - மரு - மறு = உடம்பிலுள்ள கரிய புள்ளி. மாழ்கு - மாகு - மாகம் = கரிய விசும்பு. மாகம் - நாகம் - நாகர். நாகநாடு = விண்ணுலகம். v. குற்றம் உடம்பிலுள்ள அழுக்கு பெரும்பாலும் கருநிறமாயிருப்பதாலும், வெள்ளாடையிற் படும் கருநிறம் மதியின்கண் மறுபோல் தோன்றுதலாலும், கருமை குறித்த சில சொற்கள் அழுக்கையும் அழுக்குப் போன்ற குற்றத்தையும் குறிக்கும். கரி - கரில் = குற்றம். கரி - கரிசு = குற்றம், பாவம். கள் - களங்கு - களங்கம் = குற்றம். கறு - கறை = குற்றம். காழ் = காசு = குற்றம். மல் - மலம் = அழுக்கு, பவ்வீ. |