பக்கம் எண் :

25

மால் - மார் - மாரி = காளி, முகில், மழை.

மால் - மான் - மானம் - வானம் = முகில், மழை, விண்.

மான் - வான் = முகில், மழை, விண்.

மால் - மா = கருமை.

முள் - மள் - மாள் - மாய் - மாயோன் (திருமால்), மாயோள் (காளி). மாய் - மாயம் = கருமை.

மள் - (மய்) - மை = கருமை, முகில், காராடு, கரிய குழம்பு.

மை - மயில் = கரு (நீல) நிறத் தோகையுள்ள பறவை.

மயில் - மயிலை = கருமை கலந்த வெள்ளைக்காளை.

மை - மயிர் = கரிய முடி.

மை - மயி - மசி = கரிய குழம்பு. தஞ்சை நாட்டார், எழுதும் மையை மசி யென்றே கூறுவர்.

மசி - மசகு = வண்டி மை.

மசகு - மசகம் = மயிர்.

மச்சு - மச்சம் = கரும்படர். மை - மஞ்சு = முகில்.

முள் -  மள் = மண் - மணி = கரியது, நீலக்கல். மணிவண்ணன், மணிமிடற்றோன் முதலிய பெயர்களை நோக்குக.

மள் - மரு - மறு = உடம்பிலுள்ள கரிய புள்ளி.

மாழ்கு - மாகு - மாகம் = கரிய விசும்பு.

மாகம் - நாகம் - நாகர். நாகநாடு = விண்ணுலகம்.

v. குற்றம்

உடம்பிலுள்ள அழுக்கு பெரும்பாலும் கருநிறமாயிருப்பதாலும், வெள்ளாடையிற் படும் கருநிறம் மதியின்கண் மறுபோல் தோன்றுதலாலும், கருமை குறித்த சில சொற்கள் அழுக்கையும் அழுக்குப் போன்ற குற்றத்தையும் குறிக்கும்.

கரி - கரில் = குற்றம். கரி - கரிசு = குற்றம், பாவம்.

கள் - களங்கு - களங்கம் = குற்றம்.

கறு - கறை = குற்றம்.

காழ் = காசு = குற்றம்.

மல் - மலம் = அழுக்கு, பவ்வீ.