பக்கம் எண் :

71

முரு - முரி - மூரி = வளைவு. முரிதல் = வளைதல்.

முள் - முறு - முறை - மிறை = வளைவு.

குல் - (மல்) - வல் - வல. வலத்தல் = வளைதல்.

iii. வணங்குதல்

மக்கள் கடவுளையும், தாழ்ந்தோர் உயர்ந்தோரையும் வணங்கும் போது உடம்பு வளைதலால், வளைதற் கருத்தில் வணக்கக் கருத்துப் பிறந்தது.

உறு - இறு - இற - இறை - இறைஞ்சு. இறைஞ்சுதல் = வளைதல், வணங்குதல்.

குடம் - குடந்தம் = வளைவு, வணக்கம். குடந்தம் படுதல் = வளைதல், வணங்குதல், தொழுதல்.

குள் - (மள்) - வள் - (வண்) - வணங்கு - வணக்கு - வணக்கம். வணங்குதல் = வளைதல், தொழுதல்.

iv. திரும்புதல்

ஒரு பொருள் வளையும்போது அது தான் முன்பு புறப்பட்ட இடத்தை அல்லது திசையை நோக்குதலால், வளைதற் கருத்தில் திரும்பற் கருத்துப் பிறந்தது.

துள் - (துரு) - திரு - திரும் - திரும்பு.

திரு - திரி. திரிதல் = திரும்புதல்.

முள் - முறு - முறி - மறி. மறிதல் - திரும்புதல்.

முள் - முடு - முடங்கு - மடங்கு. மடங்குதல் = திரும்புதல்.

மடங்கு - மடங்கல் = இடையிடை திரும்பிப் பார்க்கும், அதாவது முன்னும் பின்னும் நோக்கிச் செல்லும் அரிமா, அதுபோன்ற கூற்றுவன்.

v. மீள்தல்

மீள்தலாவது திரும்பி வருதல்.

துள் - (துரு) - திரு - திரும் - திரும்பு.

திரு - திரி. திரிதல் = திரும்புதல்.

“ஒன்றைச் செப்பினை திரிதி யென்றான்”                     (கம்பரா. அங்கத. 10)