மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். நற்றிணையில் காணப்பெறும் நப்பாலத்தனார் என்ற புலவரினும் இவர் வேறானவர். பாலாசிரியர் என்பதனால் இவர் சிறுவர்கட்குக் கல்வி கற்பிக்கும் தொழிலை மேற்கொண்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். நற்றிணையில் காணப்பெறும் நற்றாமனார் என்ற புலவரும் இவரும் ஒருவரா வேறா என்று ஓர் ஐயம் உள்ளது. மதுரைப்பிள்ளை (19 நூ) | நூல் : | மதுரை வெண்பாமாலை (1891) |
மதுரைப் புல்லங்கண்ணனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த சங்கப்புலவர்களுள் ஒருவர். புல்லன் என்பவருடைய மகனாராகவோ புல்லன் என்னும் வேறு பெயருடையவராகவோ இருக்கலாம.்
|