என
என்பதனால் ஆடவன் பெண்களைப்
புகழ்ந்து பாடுவது ஒருவகை என்று புலனாகும். அப்படிப் பாடுகிறவன் பாடினால் அதைக் கேட்டு மகளிர்
ஆடுவது உண்டு.
பாட்டுக்காரன் தாண்டிஅவன்
- ஏலங்கிடி லேலோ
பாடப்பாட ஆடலாண்டி -
ஏலங்கிடி லேலோ.1
அவ்வாறு பாடும் பாடல்களில்
ஏலேலங்கிடிப் பாட்டு, தில்லாலங்கிடிப் பாட்டு, கள்ளன் பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, வண்டிக்காரன்
பாட்டு என்று பலவகை உண்டு.
ஏலேலங்கிடிப் பாட்டுப்பாடி
- ஏலங்கிடி லேலோ
எடுப்போமையா கருத்தா நாற்றை
- ஏலங்கிடி லேலோ
தில்லாலங்கிடிப் பாட்டுப்பாடி
- ஏலங்கிடி லேலோ
திருப்பித் திருப்பி
நடுவோமையா - ஏலங்கிடி லேலோ
கள்ளப்பாட்டையும் கலந்து
பாடி - ஏலங்கிடி லேலோ
நல்ல மனசா நடுவோ மையா
- ஏலங்கிடி லேலோ
தெம்மாங்குப் பாட்டுப்
பாடி - ஏலங்கிடி லேலோ
கம்மால் பண்ணவே மாட்டோ
மையா - ஏலங்கிடி லேலோ
வண்டிக்காரன் பாட்டுப்
பாடி - ஏலங்கிடி லேலோ
வழிவிலக மாட்டோ மையா
- ஏலங்கிடி லேலோ2
என்னும் இடத்தில் அந்தப் பாட்டுக்களைப்பற்றித்
தொழில் செய்யும் பெண்கள் சொல்லுகிறார்கள்.
திருடனாக நடித்துப்
பாடும்போது பாடுவது கள்ளப் பாட்டு. அதைப்பற்றிய பேச்சுப் பின்னும் இரண்டு இடங்களில்
வருகிறது.
கள்ளப் பாட்டுக் கற்றுக்
கொண்டு
கணக்கா வந்தேனே - கன்னக்கோலைக்
கையில் எடுத்தேனே - கட்டிடத்தை
நாசம் செய்தேனே.3
மானா மதுரை மகராஜன் ராத்திரி
ஒருமணி தேட்டை - என்னைக்கண்டு
சிரிக்குது மூட்டை - வாயெடுத்துப்
படிப்பனே பாட்டை4
தெம்மாங்கு என்பது
ஒருவகைப் பாட்டு. அதைப்பற்றிப் பிறிதோரிடத்தில் நான் எழுதியிருப்பதிலிருந்து ஒரு பகுதியை
இங்கே கொடுப்பதில் தவறில்லையென்று எண்ணுகிறேன்.
_____________________________________________
1. ப. 134 : 93.
2. ப. 146 : 55-9.
3. ப. 192 : 3.
4. ப. 193 : 8.
|