பக்கம் எண் :

கஞ

12

மலையருவி

கஞ்சிக் கலயங்கொண்டு - குட்டி
        கருக்கரிவாள் தோளில்வச்சுப்

    பில்லறுக்கப் போறபொண்ணே - ஒரு
        பில்லைமரம் காவலோடி?
            

63

கொடிபிடுங்கி எள்விதைத்துக் - குட்டி
        கொடிவழியாப் போறபொண்ணே

    மழைபெய்து இலைவிழுந்தால் - குட்டி
        மறப்பேனோடி உன்ஆசையை?                

64

வாழையடி உன்கூந்தல் - குட்டி
        வயிரமடி பல்லுக்காவி

    ஏழையடி நான்உனக்குக் - குட்டி
        இரங்கலையா உன்மனசு? 
                  

65

கூடலூரு மேட்டுமேலே - குட்டி
        கூடைமண் எடுக்கும்பொண்ணே

    அட்டை கடிக்குதோடி - உன்
        அழகான மேனியெல்லாம்.                     

66

கான மயிலேஉன்னைக் - குட்டி
        கைவிடுவ தில்லையென்று

    மீனாட்சி கோயிலிலே - குட்டி
        வேட்டிபோட்டுத் தாண்டித்தாரேன்.
         

67

கறுத்தபையா தூண்டிற்காரா - அடே
        கறிக்குரெண்டு மீனுதாடா

    சிவத்தபொண்ணே நீவந்தியின்னா - நான்
        சீமைக்கெண்டை ஒண்ணுதாரேன்.
        

68

கல்லைவெட்டி முள்ளைவெட்டிக் - குட்டி
        கற்றாழைச் சோத்தைவெட்டிக்

    குத்துக்கட்டை ரெண்டுவெட்டி - குட்டி
        கோடாலியும் மழுங்கிப்போச்சே.
            

69