கன
கன்னி வருவாளென்று - குட்டி
கட்டிவச்சேன் கூடாரம்
கூடாரம் ரெண்டாச்சேடி -
குட்டி
குறுக்கேஒரு மதிலாச்சடி.
56
நாமிரண்டு பேருஞ்சேர்ந்து
- குட்டி
நல்லஜோடி
யாய்இருக்க
நாம்கட்டின கூடாரமே - குட்டி
நமக்குப்பகை இழுத்துதடி.
57
ஓடுகிற தண்ணியிலே - மீன்
ஆடுதடி கோரையிலே
பாடுறேண்டி உன்மேலே - குட்டி
பஞ்சவர்ணக் கிளியேபொண்ணே.
58
ஓடுகிற தண்ணியிலே - அம்மா
ஒருசொம்புத் தண்ணியெடுத்துப்
பாதம் பணிந்திட்டாலும்
- அம்மா
பையன்வரப் போறதில்லை.
59
முகத்திலே அருப்பமில்லை*
- அடே
முன்னங்கை தடிப்பமில்லை
உடம்பு சிறுத்தபையா -
அடே
உண்ணம்ஏண்டா
வெட்டிப்பேச்சு?
60
ரோட்டுக்கு அந்தப்பக்கம்
- அவள்
ஓட்டுவீட்டுக்
குள்இருப்பாள்
கெண்டைக்கால் பெருத்தவள்டி
- குட்டி
என்கண்ணுக்குப்
பிடிக்காதடி.
61
அரிசி அரிக்கையிலே - குட்டி
ஆக்கஉலை வைக்கையிலே
சோறும் வடிக்கையிலே - குட்டி
சோர்ந்துநீ விழுகாதேடி.
62
_________________________________________________
* அருப்பம் - அரும்பிய மீசை.
உண்ணம் - இன்னம்.
|