பக்கம் எண் :

கன

தெம்மாங்கு

11

கன்னி வருவாளென்று - குட்டி
        கட்டிவச்சேன் கூடாரம்

    கூடாரம் ரெண்டாச்சேடி - குட்டி
        குறுக்கேஒரு மதிலாச்சடி.
                 

56

நாமிரண்டு பேருஞ்சேர்ந்து - குட்டி
        நல்லஜோடி யாய்இருக்க

    நாம்கட்டின கூடாரமே - குட்டி
        நமக்குப்பகை இழுத்துதடி.
                     

57

ஓடுகிற தண்ணியிலே - மீன்
        ஆடுதடி கோரையிலே    

    பாடுறேண்டி உன்மேலே - குட்டி
        பஞ்சவர்ணக் கிளியேபொண்ணே.
              

58

ஓடுகிற தண்ணியிலே - அம்மா
        ஒருசொம்புத் தண்ணியெடுத்துப்

    பாதம் பணிந்திட்டாலும் - அம்மா
        பையன்வரப் போறதில்லை.
              

59

முகத்திலே அருப்பமில்லை* - அடே
        முன்னங்கை தடிப்பமில்லை

    உடம்பு சிறுத்தபையா - அடே
        உண்ணம்
†ஏண்டா வெட்டிப்பேச்சு?              

60

ரோட்டுக்கு அந்தப்பக்கம் - அவள்
        ஓட்டுவீட்டுக் குள்இருப்பாள்

    கெண்டைக்கால் பெருத்தவள்டி - குட்டி
        என்கண்ணுக்குப் பிடிக்காதடி.
  

61

அரிசி அரிக்கையிலே - குட்டி
        ஆக்கஉலை வைக்கையிலே

சோறும் வடிக்கையிலே - குட்டி
        சோர்ந்துநீ விழுகாதேடி.
    

62
_________________________________________________

    * அருப்பம் - அரும்பிய மீசை. உண்ணம் - இன்னம்.