New Page 1
கொங்கப் பறச்சிநீ -
குட்டி
குலத்துக்கெல்லாம்
கிழ்க்குலம்நீ
சங்குபோடும் கையினாலே -
குட்டி
தண்ணிதரப் பார்க்கிறாயோ?
49
தண்ணியும் நான்தருவேன் -
இன்னம்
தவிக்கும்போது
பால்தருவேன்
கூடத்துக்கு வந்தாயானால்
- மாமா
குளிர்ந்ததண்ணி கூடத்தாரேன்.
50
பச்சைமரத்துக் கடியிலேதான்
- குட்டி
பாம்பிருக்கும் தேளிருக்கும்
தட்டுவாணி கொண்டையிலே
- குட்டி
தப்பாமல் பூவிருக்கும்.
51
மஞ்சி மணக்குதடி - குட்டி
மகராசி கொண்டையிலே
இஞ்சி மணக்குதடி - குட்டி
இளங்குமரி உன்மேலே.
52
துரையே துரைமகனே - மாமா
துரைக்கேற்ற மேட்டிபையா
நாற்காலி தூக்கும்பையா -
உனக்கு
நாகரிகம் மிஞ்சுதடா,
53
குங்குமப் பொட்டுவச்சுக்
- குட்டி
கோட்டைவழி
போறவளே
குங்கும வாடைபட்டு -
எனக்குன்
கூடவரக் கூடலையே.
54
உச்சி மலைமேலே - குட்டி
ஊர்க்குருவி கூடுகட்டி
ஆளைக்கண்டு கத்துதடி -
குட்டி
அழகுள்ள
அந்தக்குருவி.
55
|