பக்கம் எண் :

New Page 1

10

மலையருவி

கொங்கப் பறச்சிநீ - குட்டி
        குலத்துக்கெல்லாம் கிழ்க்குலம்நீ

    சங்குபோடும் கையினாலே - குட்டி
        தண்ணிதரப் பார்க்கிறாயோ?
             

49

தண்ணியும் நான்தருவேன் - இன்னம்
        தவிக்கும்போது பால்தருவேன்

    கூடத்துக்கு வந்தாயானால் - மாமா
        குளிர்ந்ததண்ணி கூடத்தாரேன்.
                

50

பச்சைமரத்துக் கடியிலேதான் - குட்டி
        பாம்பிருக்கும் தேளிருக்கும்

    தட்டுவாணி கொண்டையிலே - குட்டி
        தப்பாமல் பூவிருக்கும்.                      

51

மஞ்சி மணக்குதடி - குட்டி   
        மகராசி கொண்டையிலே

    இஞ்சி மணக்குதடி - குட்டி
        இளங்குமரி உன்மேலே.
                   

52

துரையே துரைமகனே - மாமா
        துரைக்கேற்ற மேட்டிபையா

    நாற்காலி தூக்கும்பையா - உனக்கு
        நாகரிகம் மிஞ்சுதடா,
              

53

குங்குமப் பொட்டுவச்சுக் - குட்டி
        கோட்டைவழி போறவளே

    குங்கும வாடைபட்டு - எனக்குன்
        கூடவரக் கூடலையே. 
                    

54

உச்சி மலைமேலே - குட்டி
        ஊர்க்குருவி கூடுகட்டி

    ஆளைக்கண்டு கத்துதடி - குட்டி
        அழகுள்ள அந்தக்குருவி.       
            

55