பக்கம் எண் :

தெம்மாங்கு

9

பாட்டுக்குப் பாட்டறிவேன் - குட்டி
        பலபாட்டு நான்அறிவேன்

    எதிர்ப்பாட்டு பாடாவிட்டால் - நாக்கை
        இழுத்துப்பிடித் தறுத்திடுவேன்.
                  

42

மஞ்சள் புடைவைகட்டி - குட்டி
        மதிலோரமாப் போறபொண்ணே

    மஞ்சள்வாடை பட்டுநான் - குட்டி
        மாடோட்டவும் கூடலையே.                  

43

கூடைமேலே கூடைவச்சு - அடி
        கூடலூரு போறபொண்ணே

    கூடைவந்து அரைப்பணமாம் - உன்
        கொண்டைப்பூக் கால்பணமாம்.
          

44

தண்டை கொலுசுக்காரி - குட்டி
        தாவார வீட்டுக்காரி

    கொண்டையிலே பூவுவைக்க - இன்னும்
        கொஞ்சநாளு போகணுண்டி. 
              

45

ஊரார் உறங்கையிலே - குட்டி
        உன்புருசன் தூங்கையிலே

    சந்யாசி வேசங்கொண்டு - குட்டி
        சாமத்திலே நான்வருவேன். 
                  

46

குடமெடுத்துக் கூடவந்த - அடி
        கோலவர்ண நீலவண்டே

    படமெடுத்த பாம்புபோலே - குட்டி
        பத்துதடி என்மனசு.
               

47

மலைபோல மாமரமாம் - மாமா
        மாமரத்தில் ஒருஊஞ்சலாம்

    மாயக்கிருஷ்ணனைப் போலேநீயும் - மாமா
        மாயஊஞ்சல் ஆடணுமா?
                                                           

48